NFPE
அஞ்சல் மூன்று மாநில மாநாடு
04.09.2015 முதல் 07.09.2015
புதுக்கோட்டை - திருச்சி
மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு அஞ்சல் நான்கு மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.
மாநில தலைவர் : தோழர் P.மோகன் வடசென்னை,
மாநில செயலாளர் : தோழர் J.ராமமூர்த்தி மத்திய சென்னை
மாநில நிதி செயலர் : தோழர் : A.வீரமணி அண்ணா ரோடு அஞ்சலகம் சென்னை
அஞ்சல் மூன்றின் மாநில மாநாட்டில் நான் கண்ட பரிணாம வளர்ச்சி ...
எத்தனையோ அஞ்சல் மூன்றின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டுள்ளேன். 10 ஆண்டுகளுக்கு முன் மாநில மாநாடுகளில் விவாதங்கள் என்ற பெயரில் நடக்கும் தடிமனான விவாதங்கள் , தனி நபர்களை தடித்தனமாக விமர்சிப்பதும் , தலைவர்களை கொச்சை படுத்தி பேசுவதுமான மாநாடாக , சாதாரண ஊழியர்கள் மாநாட்டிற்கு வருவதற்கே அஞ்சும் வகையில் இருக்கும்.
ஆனால் இந்த மாநாட்டில், விவாதங்கள் மிக செழுமையாக , ஆரோக்கியமாக , இளைங்கர்களை உற்சாக படுத்துகின்ற வகையில் அமைந்தது.
போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தாலும் கூட, நாகரீகமாக, வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்திய அந்த அணி தலைவர்களின்
தொழிற்சங்க பணி முதுமை, வளர்ச்சி மனதை நெகிழ செய்தது.
நிச்சையமாக மாற்றம் இருக்கிறது, அஞ்சல் ஊழியர்களின் ஒற்றுமை வியக்க வைக்கிறது.
பிரச்சனைகள் நம்மை ஒன்று சேர்க்கும். நாம் வெல்வோம். அஞ்சல் மூன்றின் மாநாடு வெற்றியே!!!
G.கண்ணன்,
மாநில செயலாளர்,
NFPE - P4
சென்னை -05
No comments:
Post a Comment