26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, December 2, 2016

மாநில மாநாடு மற்றும் மாநில செயற்குழுவிற்கான அறிவிப்பு:


Thursday, November 17, 2016

NFPE - FNPO - PJCA.
கோட்ட/கிளை செயலாளர்கள் கவனத்திற்கு:

18.11.2016 - நாளை தமிழகம் முழுவதும் அனைத்து கோட்ட/கிளை அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்.

கோரிக்கைகள்:
1. 500 மற்றும் 1000 ரூபாய் பண மாற்று பரிவர்த்தனை தொடர்பாக ஊழியர்களுக்கு ஏற்ப்படும் இன்னல்களை களையக் கோரி...

2. ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் அஞ்சல் ஊழியர்களை பணிக்கு வரவழைத்து பட்டுவாடா பண்ண சொல்லி கொடுமைப் படுத்துவதை உடனே நிறுத்தக்கோரி...

நோட்டீஸ் போட நேரமின்மையால் இதையே நோட்டீஸாக எடுத்துக் கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச்செய்வீர்!!
போராட்ட வாழ்த்துக்களுடன்
G.கண்ணன்,
கன்வீனர்,
COC - NFPE.

Wednesday, November 16, 2016

தோழர்களே!
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பரிமாற்ற வேலைகள் சம்பந்தமாக நமது அஞ்சல் இலாகாவில் சரியான திட்டம் இல்லாமலும்,  ஊழியர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்காமலும் ஏற்படும் கஷ்டங்களை தீர்க்க கோரி CPMG TN CIRCLE அவர்களுக்கு நமது மாநில சங்கத்தின் சார்பாக எழுதிய கடித நகல்...

No.P4/Currency Notes/Exchange                                                                                    Date:16.11.16


To,

The Chief Postmaster General,

Tamil Nadu Circle,

Chennai 600 002.



Respected Sir,



Sub:  Carrying out the National Duty of Exchange of demonetized currency notes in the denominations of Rs.500/- and Rs.1000/- and the need to beef up the security with upgraded infrastructure – reg.

            -------------------------------------



We, while extending our fullest cooperation with dedicated service with regard to the above mentioned subject, would like to bring to your kind notice the following points for favour of your kind notice for speedy and needy action.



With profound pride and prestige we, the postal employees are fully extending our fullest cooperation in carrying our National duty of exchange of demonetized currency notes as announced by our Hon’able Prime Minister.  It is a matter of pride that our Post offices are doing this greatest service along with the Banks and as a member of this prestigious Postal department chosen by our Hon’able PM ji himself to do this very important national duty.  The unprecedented crowd gathered at Post Offices make us not only proud but also establishes our importance in the Society in its important moments. While performing the national duty entrusted to us by the Government, we would like to point out certain important things that need to be addressed by our administration.



1]         Though it is of paramount important for our employees to perform this duty including Sundays and Holidays, it is pertinent to note that the employees of the selected offices have to stretch beyond stretchable limits by straining every nerve from dawn to not dusk but to dark.  Starting from early in the morning and working beyond late hours in the nights make them physically and mentally drained.  While, our brethren in banks are given suitable monetary compensation with all infrastructural benefits with suitable police escorts, we, the postal employees have to toil in the absence of such facilities.  The unprecedented crowd make the atmosphere stressful for want of sufficient number of hands and proper infrastructure.  Our staff have to sit in the streets, verandahs and in public halls that lack in security and safety to render this important service.  Hence, it is requested that arrangements with safety and security may be arranged temporarily and armed escort must be provided.  To relieve the same set of employees from undue stress and strain the employees of administrative offices and other offices that are not earmarked for exchange of notes may be brought on duty on rotation basis.



2]        The non-supply of fake note detecting/counting machines multiplies the risk involved in the job as fake currency are freely in circulation as per the reports of the Government itself.  To safeguard our innocent employees from the clutches of such anti-social elements circulating such fake currency notes, the fake-note-detecting and counting machines may be supplied to all post offices without delay.  The available number of such machines are inadequate and many offices do not have any.  Action on war-footing is highly solicited.



3]        The transit of huge volumes of such currency between SOs and HOs and from HOs and authourised banks has become a head-ache.  The crores of rupees collected needs to be transmitted safely to its destination.  This needs to be immediately attended to by providing armed police escorting the transit of heavy cash remittance.



4]        By incurring incidental expenses, the refreshments for the employees working from 6.30 am to midnights may be provided as being done in various banks.  In the name of austerity, this minimum requirement of employees need not be denied.



5]        The control rooms established in HOs, DOs and ROs need to act in unison with that of CO so that uniform guidelines are given to the employees of SB branch and money-exchange counters.  The different guidelines/instructions given by different persons manning different control rooms make the employees confused and the lack of uniformity in instructions give rise to chaos resulting in dipping the morale of employees.



6]        It is requested that for the extra hours of work performed on everyday may be suitably compensated monetarily as being done in banks, the work performed on Sundays and holidays may be compensated by Compensatory Off.



We solicit your immediate intervention in this matter.



Thanking you,



Yours faithfully,



G. KANNAN,

Circle Secretary.
AIPEU PM & MTS,
Tamilnadu circle,
Chennai - 600 014

Tuesday, November 8, 2016

NFPE P4.

7வது ஊதியக்குழுவில் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடகோரி..
மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் சார்பில் இன்று 07.11.2016  இரண்டாவது கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் தலைநகர் சென்னையில் தமிழ் மாநிலத்தலைவர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் தலைமை உரையுடன் ஆரம்பமானது.

மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் தோழர் மணிஆச்சாரி அவர்கள் துவக்கவுரையாற்றினார்.
அடுத்ததாக தோழர்கள் RB.சுரேஷ் அ.இ.அமைப்பு செயலாளர், தோழர் பாலசுந்தரம் மாநில உதவி செயலாளர், S.ரகுபதி NFPE சம்மேளன உதவி மா பொது செயலாளர், M.துரைப்பாண்டியன் மாநில செயலாளர், G.கண்ணன் கன்வீனர் NFPE COC மற்றும் பல அரங்கத்தை சார்ந்த தோழர்கள் கோரிக்கைகளின் முக்கியத்துவம் பற்றியும், போராட்டத்தின் தீவிரம் பற்றியும் விளக்கிப் பேசினார்கள். இறுதியாக ம.அ.ஊ.மகா சம்மேளனத்தின் மாநில பொருளாளர் தோழர் வெங்கடேசன் அவர்கள் நன்றி கூறி முடித்தார்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.













NFPE P4.

7வது ஊதியக்குழுவில் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிடகோரி..
மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் சார்பில் இன்று 07.11.2016  இரண்டாவது கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் தலைநகர் சென்னையில் தமிழ் மாநிலத்தலைவர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் தலைமை உரையுடன் ஆரம்பமானது.

மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் தோழர் மணிஆச்சாரி அவர்கள் துவக்கவுரையாற்றினார்.
அடுத்ததாக தோழர்கள் RB.சுரேஷ் அ.இ.அமைப்பு செயலாளர், தோழர் பாலசுந்தரம் மாநில உதவி செயலாளர், S.ரகுபதி NFPE சம்மேளன உதவி மா பொது செயலாளர், M.துரைப்பாண்டியன் மாநில செயலாளர், G.கண்ணன் கன்வீனர் NFPE COC மற்றும் பல அரங்கத்தை சார்ந்த தோழர்கள் கோரிக்கைகளின் முக்கியத்துவம் பற்றியும், போராட்டத்தின் தீவிரம் பற்றியும் விளக்கிப் பேசினார்கள். இறுதியாக ம.அ.ஊ.மகா சம்மேளனத்தின் மாநில பொருளாளர் தோழர் வெங்கடேசன் அவர்கள் நன்றி கூறி முடித்தார்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.












Tuesday, November 1, 2016

31.07.2016 தேதியில் தபால்காரர் & MTS  பதவியிலிருந்து எழுத்தர் பதவிக்கு தேர்வு எழுதி, தேர்வு பெற்றவர்களில் முதல் பட்டியலில் பெயர் வெளியாகி பயிற்சிக்கு போனவர்கள் போக உபரியாக உள்ள மற்ற தபால்காரர் & MTS ஊழியர்களையும் காலியாக உள்ள மற்ற இடங்களில் பணியமர்த்த கோரி NFPE P4 தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக 22.10.2016 அன்று CPMG அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகல்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.

Sunday, October 30, 2016

Temporary Employee to be paid at par with regular worker: SC

HIGHLIGHTS

SC said contractual employees are entitled to wages at par with permanent employee
  • Principle of ‘equal pay for equal work’ must be followed, SC said
  • Undoubtedly, the action pf paying lesser wage is oppressive, the bench said
NEW DELHI: In a big relief to lakhs temporary employee who have been hired by government departments and agencies across the country on contractual basis, the Supreme Court on Wednesday held that they are entitled to wages at par with permanent employees and principle of 'equal pay for equal work' must be followed.

A bench of Justices JS Khehar and SA Bobde said the principle of 'equal pay for equal work' constitutes a clear and unambiguous right vested in every employee whether engaged on regular or temporary basis.

"In our considered view, it is fallacious to determine artificial parameters to deny fruits of labour. An employee engaged for the same work, cannot be paid less than another, who performs the same duties and responsibilities. Certainly not, in a welfare state. Such an action besides being demeaning, strikes at the very foundation of human dignity," the bench said.

The bench said the principle had been expounded through a large number of judgments rendered by the apex court and and constitutes law declared by the Supreme Court.

"Any one, who is compelled to work at a lesser wage, does not do so voluntarily. He does so, to provide food and shelter to his family, at the cost of his self respect and dignity, at the cost of his self worth, and at the cost of his integrity. For he knows, that his dependents would suffer immensely, if he does not accept the lesser wage," Justice Khehar, who wrote the judgement, said.


"Any act, of paying less wages, as compared to others similarly situate, constitutes an act of exploitative enslavement, emerging out of a domineering position. Undoubtedly, the action is oppressive, suppressive and coercive, as it compels involuntary subjugation," he said.

The court passed the verdict on a bunch of petition filed by tempoary employee working for state of Punjab seeking wage parity with regular employee. They approached the apex court after Punjab and Haryana High Court held that temporary employees were not entitled to the minimum of the regular pay-scale, merely for reason, that the activities carried on by them and the regular employees were similar.

Setting aside the HC order, the apex court held that the principle of equal pay for equal work must be followed in the country as India was a signatory of International Covenant on Economic, Social and Cultural Rights.

"There can be no doubt, that the principle of equal pay for equal work would be applicable to all the concerned temporary employees, so as to vest in them the right to claim wages, at par with the minimum of the pay-scale of regularly engaged government employees, holding the same post,"it said.

"India is a signatory to the covenant, having ratified the same on April 10, 1979. There is no escape from the above obligation, in view of different provisions of the Constitution and in view of the law declared by this court under Article 141 of the Constitution of India, the principle of 'equal pay for equal work' constitutes a clear and unambiguous right and is vested in every employee - whether engaged on regular or temporary basis,"it said.

Read at: Times of India


GDS ஊழியர்கள் போனஸ் 7000/
எப்படி வந்தது??
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொது செயலாளர் தோழர் M.கிருஷ்ணன் அவர்களின் விளக்கம்.

1.4.2014 முதல் அனத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் போனஸ் உச்சவரம்பு 3500 ல் இருந்து 7000 மாக 29.8.2016 ல் மத்திய அரசால் உத்திரவு வெளியிடப்பட்டது. அதற்கான நிலுவைத் தொகை 7000 ரூபாயும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் அஞ்சல் வாரியம் இந்த உயர்த்தப்பட்ட போனஸ் உச்சவரம்பு உத்திரவை GDS ஊழியர்களுக்கு அமுல்படுத்த மறுத்து விட்டு, GDS ஊதியக்குழுவின் பரிந்துரைக்காக அனுப்பிவிட்டது.

இதற்கு முன் நடராஜமூர்த்தி கமிட்டி, GDS ஊழியர்களின் உற்பத்தி திறன் 50% மட்டுமே உள்ளதால் அவர்களுக்கு 3500 ல் பாதி 1750 மட்டும் போனஸாக வழங்கினால் போதும் என்று பரிந்துரை வழங்கியது. இதற்கு எதிராக அப்பொழுது NFPE மற்றும்  AIPEU-GDS அமைப்புகள் FNPO மற்றும் NUGDS அமைப்புகளோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட, அப்போதைய துறை அமைச்சரோடு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, அமைச்சரின் சாதகமான பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் GDS ஊழியர்களுக்கு 3500 போனஸை மூன்று முறை மறுத்து 2500 வழங்கியது. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்புதான் நிதியமைச்சகம் 3500 போனஸை ஏற்றுக்கொண்டு வழங்கியது.

இந்த முறை கமலேஷ் சந்திரா குழுவின் மாறுபட்ட நிலை:
இந்த முறை GDS குழுவின் தலைவர் கமலேஷ் சந்திரா  உயர்த்தப்பட்ட 7000 ரூபாய் போனஸை GDS ஊழியர்களுக்கும் பரிந்துரை செய்தது.

"GDS ஊழியர்களால் நடத்தப்படும் அலுவலகங்களில் வருமானமும் செலவும் சமமாக உள்ளது. அஞ்சல் துறையின் மொத்த பற்றாக்குறை ரூபாய் 6000 கோடியாக உள்ளது. ஆனால் GDS ஊழியர்களால் பற்றாக்குறை என்பது 200 கோடி மட்டுமே. அஞ்சல் RMS அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்களில் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை பார்க்கும் பொழுது GDS ஊழியர்களின் வருவாய் பற்றாக்குறை என்பது மிகவும் குறைவானதே என்று எடுத்துக்காட்டிய பின், GDS போனஸ் கோப்பு அஞ்சல் வாரியத்தால் நிதியமைச்சகத்திற்க்கு அனுப்பப்பட்டது.  விரிவான ஆய்விற்க்குப்பின் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு அஞ்சல்துறையால் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு 7000 போனஸ் உத்திரவு வெளியிடப்பட்டது.

NFPE மற்றும் AIPEU-GDS சங்கங்களின் பங்களிப்பு:
NFPE சம்மேளனத்தின் மாபொதுச்செயலாளர் தோழர் RN.பராசர் மற்றும் AIPEU-GDS-NFPE பொதுச்செயலாளர் தோழர் R.பாண்டுரெங்கராவ் இணைந்து FNPO மற்றும் NUGDS அமைப்புகளை இணைத்துக் கொண்டு GDS ஊழியர்களுக்கு எதிராக போனஸ் பாரபட்சம் காட்டப்படுவதை கண்டித்தும், அனைத்து கேசுவல் மற்றும் பகுதிநேர, கண்டிஜன்ட் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க கோரியும் பல இயக்கங்களுக்கு அறைகூவல் விட்டன. கோட்ட, மண்டல, மாநில அளவில் ஆர்ப்பாட்டங்களும் தர்ணா போராட்டங்களும் நடத்தப்பட்டது. நவம்பர் 3 2016 முதல் டெல்லி தலைமை அஞ்சலகம் முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமும், நவம்பர் 9 மற்றும் 10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீசும் அஞ்சல் துறை செயலரிடம் 20.10.16 அன்று வழங்கப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட வேலைநிறுத்த பிரச்சார இயக்கத்திற்கு ஊழியர்களிடம் உற்சாக வரவேற்பு கிடைத்தது.

இலாகா - GDS - ஊழியர் ஒற்றுமை .. உடைக்க முடியாத ஒற்றுமையை ஏற்படுத்திய தோழர் ஆதி:
ED ஊழியரை இலாக்கா ஊழியராக்கு என்ற ஒரே கோரிக்கை வைத்து 1984 செப்டம்பர் 19 அன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தோழர் ஆதிநாராயணா அவர்கள் வெற்றிகரமாக நடத்தினார்கள். 32 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் NFPE, AIPEU-GDS மற்றும் FNPO,NUGDS அமைப்புகள் இணைந்து GDS மற்றும் கேசுவல் ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக மட்டுமே நவம்பர் -9,10 -2016 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது.
NFPE மற்றும் அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழு எப்பொழுதும் GDS மற்றும் கேசுவல் ஊழியர்களை விட்டுக் கொடுக்காது, அவர்களும் அஞ்சல் குடும்ப உறுப்பினர்கள் என்பதை இப்பொழுதும் நிரூபித்துள்ளோம். இந்த உறுதியான தொழிலாளிவர்க்க நிலைபாட்டை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ, திரித்துக் கூறவோ முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட  GDS சங்கத்தின் நிலை என்ன??
NFPE சங்கங்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் கொடுப்பதை விமர்சனம் செய்யும் திரு மகாதேவைய்யா அவர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மட்டுமே நம்புவதாக கூறும் அவர் இந்த முறை 25,26 - 10 -2016 இரண்டு நாட்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது மட்டுமல்ல அதற்கான பிரச்சாரமும் செய்யாமல், போனஸ் உத்திரவு வராமலே திடீரென 24.10.2016 அன்றே வேலைநிறுத்தத்தை விலக்கி கொண்டது எதற்கு என்ற கேள்வியை GDS ஊழியர்கள் கேட்கிறார்கள். அங்கீகாரம் ரத்தாகிவிடும் என்கிற அமைச்சகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டு GDS ஊழியர்கள் கோரிக்கைகளை விலையாக கொடுத்து விட்டார். திரு மகாதேவைய்யா அவர்கள் GDS ஊழியர்களை சில காலம் ஏமாற்றலாம், எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை ஊழியர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

NFPE, AIPEU-GDS மற்றும் PJCA நிலைபாடு:
திரு மகாதேவையாவுக்கு வந்த அதே மிரட்டல் NFPE/AIPEU-GDS மற்றும் PJCA வுக்கு வந்தாலும், GDS மற்றும் கேசுவல் ஊழியர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நவம்பர் 9,10 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தே தீரூம் என்ற உறுதியான நிலைபாட்டை PJCA எடுத்ததின் காரணமாகத்தான் 27.10.2016 அன்று GDS ஊழியர்களுக்கு,  உயர்த்தப்பட்ட 7000 போனஸ் உத்திரவும், கேசுவல் ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் புதிய ஊதியம் வழங்கிடும் உத்திரவு இதற்கு முன்பே வந்தாலும், இந்த உத்திரவை அமுல்படுத்தாத அனைத்து மாநில CPMG களும் கறாராக அமுல்படுத்திட மீண்டும் கடிதம் அனுப்பிட இலாக்கா ஏற்றுக் கொண்டது.

GDS-ஊதியக்குழுவும் - NFPE/AIPEU-GDS பங்களிப்பும் :
        NFPE மற்றும் AIPEU-GDS அமைப்பும் GDS ஊதியகுழுவிடம்விரிவான எழுத்துப்பூர்வமான அறிக்கையை கொடுத்துள்ளது.  இந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழு GDS ஊதியகுழுத்தலைவர் திரு.கமலேஷ் சந்திரா அவர்களை மூன்றுமுறை நேரில் சந்தித்து நேரடி சாட்சியம் அளித்துள்ளது. அரசு ஊழியர் அந்தஸ்தும், இலாக்கா ஊழியருக்கு இணையான சலுகைகளும் உரிமைகளும் GDS ஊழியருக்கு தரப்பட வேண்டும் என்பதே நம் முக்கிய கோரிக்கை.  GDS ஊதிய குழு நவம்பர் 2016 ல் பரிந்துரைகளை வழங்குவதாக கூறியுள்ளது.  பரிந்துரைகள் GDS ஊழியருக்கு எதிராக இருக்குமானால் NFPE, AIPEU-GDS மற்றும் அஞ்சல் கூட்டு போராட்ட குழுவோடு இணைந்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட பலபோராட்டங்களை  நடத்திடும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக GDS  ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத திரு மகாதேவய்யா அவர்கள் GDS ஊழியர்களின் எதிரி இலாக்கா ஊழியர்கள் என்று சித்தரித்து அஞ்சல் ஊழியர்களின் ஒற்றுமையை சிதைத்து வருகிறார்.  இச்செயல் மற்ற பல மத்திய அரசு ஊழியர்கள் அமைப்போடு இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்திற்கு எதிரானது. குறிப்பாக GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வெல்வதற்கு எதிரானது.

இத்தகைய சூழலில் ஒவ்வொரு GDS ஊழியரும்
AIPEU-GDS-NFPE அமைப்பை பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.  ஒன்றுபட்ட போராட்டமே GDS ஊழியர்களின் நியாயமான  பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு GDS ஊழியரும் நடைபெறவுள்ள உறுப்பினர் சரிபார்ப்பில் AIPEU-GDS-NFPE அமைப்புக்கு ஆதரவாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளம் மற்றும் JCM (தேசிய குழு - ஊழியர் தரப்பு)  பங்களிப்பும் பாராட்டகூடியது.  25.10.2016 அன்று JCM National council கூட்டத்தில் GDS பிரச்சனையை  அரசுடன் விவாதித்து உடனடி தீர்வு காண  வலிவுறுத்தப்பட்டது.

NFPE, AIPEU-GDS மற்றும் FNPO, NUGDS உள்ளடக்கிய அஞ்சல் போராட்ட குழுவின் போனஸ் போராட்டம் மாபெரும்   வெற்றியே!!

GDS- இலாக்கா ஊழியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சக்திகளை தனிமைப்படுத்துவோம்....

இலாக்கா GDS ஊழியர்களின் - அமைப்புகளின் ஒற்றுமையை பலப்படுத்துவதின் மூலம் எதிர்காலத்தில் GDS ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டு போர்முரசொலிப்போம்!!  தடைகளை தகர்த்தெறிவோம்.

வெற்றி முரசு கொட்டுவோம்.

புரட்சிகர போராட்ட வாழ்த்துக்களுடன்,
G.கண்ணன்,
மாநில செயலாளர்,
AIPEU - PM & MTS,
தமிழ் மாநிலம்.

Friday, October 28, 2016

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

தீபாவளிக்கு ஆயிரம் கதைகள் சொன்னாலும், குறிப்பாக கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களின் குடும்பங்களில் சிறுவர்களுக்கு  தீபாவளி என்றால் முதலில் ஞாபகம் வருவது    டவுசர் சட்டை, பாவாடை சட்டை (தாவணியும்) தான்.

ஏனென்றால் அடுத்த வருட தீபாவளி வரை அதுதான். அதனால்தான் டவுசருக்குப்பின்னால் தபால்பெட்டியை நிறைய மாணவர்கள் வைத்திருந்தார்கள். ஆகவே தான் எதனால் தீபாவளி வந்தது என்பதை விட எப்பொழுது வரும் என காத்திருந்தார்கள்.

அதுமட்டுமல்ல,
இட்லி, வடை, சுசியம், சீடை, முறுக்கு போன்ற பண்டங்களை ஆசைதீர சாப்பிடுவதும் அன்றுதான். சீடை, முறுக்கு யை நிறைய செய்து பானையில் போட்டு வீட்டின் மேல் கட்டி விட்டு நாட்கணக்கில் உபயோகிக்கும் நாளும் தீபாவளிதான்.

இப்படி ஏழைகளின் கனவு நாள், தீபாவளி...
அந்த மக்களின் மகிழ்ச்சிக்காக..

(நாங்களும் எங்கள் குடும்பத்தில் இக்கனவை, ஆண்டுக்கு இரண்டு உடைகளை பெற்றுள்ளோம்.)

வாழ்த்துக்கள்..தீபாவளி வாழ்த்துக்கள்.
G.கண்ணன்,
மாநில செயலாளர்.

Thursday, October 27, 2016

GDS BONUS ORDERS RELEASED TODAY.

தோழர்களே!
நமது போராட்ட அறைகூவலுக்கு கிடைத்த வெற்றி. GDS தோழர்களுக்கு போனஸ் 7000 ற்கான நிலுவைத்தொகைக்கான உத்திரவு இன்று வெளியாகி உள்ளது.

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.
Postal JCA
Tamil nadu Circle.

NFPE -FNPO அனைத்து மாநில செயலாளர்களின்  அவசரக்கூட்டம்.. 27.10.2016 இன்று மாலை 5.30 மணி. இடம் அண்ணாசாலை.

பொருள்: ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அஞ்சல் நிர்வாகம் ஊழியர்களை பணிக்கு வரச்சொல்வது சம்பந்தமாக... முடிவு எடுக்க..

தோழர்களே!
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணிக்கு வரச்சொல்லும் உத்தரவை கண்டித்தும், ரத்து செய்ய கோரியும் நேற்று 26.10.2016 அன்று PJCA சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வெகு சிறப்பாக நடந்துள்ளது. அனைத்து கோட்ட/கிளை செயலாளர்களுக்கும் NFPE , FNPO JCA சார்பாக புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

மேற்கு மண்டல PMG அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மனிதாபிமானத்தோடும், ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் தீபாவளி மற்றும் அடுத்த ஞாயிற்று கிழமையில் மேற்கு மண்டலம் மற்றும் தென்மண்டல ஊழியர்கள் பணிக்கு வர வேண்டியதில்லை என்ற உத்தரவிட்ட மேற்கு மண்டல PMG அவர்களை நன்றியுடன் வாழ்த்துகிறோம்.

இதற்கிடையில்,
இது விசயம் சம்பந்தமாக 26.10.16 காலை 10.30 மணிக்கு பேசலாம் என்று   PMG MM அவர்கள் PJCA கன்வீனர்களை அழைத்ததின் அடிப்படையில் தோழர்கள் P.குமார் தலைவர் PJCA FNPO,  G.கண்ணன், கன்வீனர் PJCA NFPE, P.சுகுமாறன் மாநில செயலாளர் FNPO - P4 ஆகியோர் சென்றோம்.

நிர்வாக தரப்பில்  PMG MM மற்றும் DPS Head Quarter அவர்களும் இருந்தார்கள். சுமார் அரை மணி நேரம் பேசினோம். பின்பு CPMG யுடன் பேசிவிட்டு மதியம் பதில் சொல்வதாகவும்,  அதுவரை காத்திருக்கமாறும் சொன்னார்கள். மாலை 5.00 வரை CPMG அலுவலகத்தில் இருந்தோம். இது வரை எந்த தகவலும் இல்லாத சூழ்நிலையில் இன்று மாலை PJCA, ஊழியர்களின் கஷ்டத்தை ஒழிக்கும் படியான, சரியான முடிவை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமை வாழ்த்துக்களுடன்,
P.குமார்.                                         G.கண்ணன்,
தலைவர்,                                        கன்வீனர்,
PJCA.                                                PJCA

Monday, October 24, 2016

NFPE - P4
Tamilnadu Circle.

24.10.2016.

கோட்ட / கிளை செயலாளர்கள் மற்றும் நமது சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு...

தோழர்களே!
நமது மாநில மாநாடு டிசம்பர் 29,30  2016 ல் திண்டிவனம் நகரில் நடைபெறும் நிகழ்வை முன்பே அறிவித்திருந்தோம்.

நடைபெரும் மாநில மாநாட்டில் , தமிழகத்தில் 2015-2016 ஆண்டிற்கான(இறுதியாக நடைபெற்ற தேர்வு) SSLC மற்றும் +2 தேர்வுகளில் பரிட்சை எழுதிய, அஞ்சல் துறையில் தபால்காரர் மற்றும் MTS ஆக பணிபரியும் ஊழியரின் குழந்தைகளில், மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த குழந்தைகளை கௌரவிக்க இருப்பதால் பெற்றோர்கள் குழந்தைகளின் மார்க் லிஸ்ட்டை அந்தந்த கோட்ட செயலரிடமோ அல்லது மாநில சங்கத்திற்கோ நவம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு முன் உங்கள் முகவரியுடன் (செல் நம்பர்)அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல், தமிழ் மாநில அஞ்சல் துறையில் பணிபுரியும் விளையாட்டு வீரர்கள் நமது துறைக்காக  National level tournaments, International level tournaments, Olympics ஆகியவைகளில் கலந்து கொண்டு  தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்ற வீரர்களை நமது மாநில மாநாட்டில் கௌரவிக்க இருப்பதால் , அவர்களின் சான்றிதல்களின் நகல் மற்றும் விபரங்களை கோட்ட செயலாளர்களின் மூலமாகவோ, நேரடியாக மாநில சங்கத்திற்கோ உங்கள் முகவரியுடன் 30.11.2016 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். With Mobile number.
மாநில சங்க முகவரி:
G.Kannan,
Circle secretary,
AIPEU-Postmen&MTS,
Royapettah - PO,
Chennai-600014.

G.கண்ணன்
மாநில செயலாளர்.

Sunday, October 23, 2016







NCA பேரவையின் சார்பாக நாகர்கோவில் நகரில் நடைபெறும் தோழர் N.பாலு அவர்களின் நினைவேந்தல் கூட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

பேரவைக்கும், பொதுச்செயலாளர்  தோழர் SK.ஜேக்கப்ராஜ் அவர்களுக்கும்  நான் அனுப்பிய மடல்...

                                                    23.10.2016
NCA பேரவையின் பொதுச் செயலாளர் அன்புத் தோழர் SK ஜேக்கப்ராஜ் அவர்களுக்கு, NFPE - P4 மாநில செயலாளர் G.கண்ணனின் பதிவு.

உடல்நிலை சரியில்லாததின் காரணமாக தோழர் N.பாலசுப்பிரமணியன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

தமிழக அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றில் தனக்கென  முத்திரை பதித்த தோழர் N.பாலு அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்விடம்,
                எதிர்காலத்தில் தொழிலாளர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போராட்டப் பாதையில், "ஒற்றுமை என்ற முரசு" ஓங்கி ஒலிக்கும் களமாக, அஞ்சல் ஊழியர் போர்ப்படையின் தளத்தை விரிவுபடுத்தும் பாசறையாக உருவெடுக்க வேண்டும் என்ற என் பதிவை,
         அஞ்சா நெஞ்சன் என பெயர் தாங்கி, இரும்பு இதயம் கொண்ட முரட்டுத் தோழன் N.பாலு அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

            இந்நாளில் அவரிடம் என்னைக் கவர்ந்த சில விசயங்களை பதிவு செய்ய கடமையுடையேன்.

              தோழர் பாலு அவர்களின்,
அஞ்சாமை, வீரம், பிரச்சனைகளை அதிகாரவர்க்கத்திடம் எகிரித்தகர்க்கும் பாங்கு, அதிகாரிகளை அதிரவைக்கும் தொழிலாளிவர்க்கத் திமிர், இத்தனையும் தாண்டி முத்தாய்ப்பாய்,
போராட்டங்கள், மாநாடுகள், அணி பிரச்சனைகள் வரை  எந்த நிகழ்வானாலும் மேடைகளில் அமராமல்,
              "ஊழியரோடு ஊழியராய் கீழே கலந்து பின்னி பினைந்துவிடும் அடிமட்ட வரையிலான ஊழியர் உணர்வு"  இவையனைத்தும் நிகழ்கால எதிர்கால தொழிற்சங்கவாதிகளும், தற்பொழுது பணிக்கு வந்த இளைஞர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்.

                   இறுதியாக,
தோழர் பாலு அவர்களுடன்  கருத்து வேறுபாடு உள்ள அணிகள், தலைமைகள். தலைவர்கள், ஊழியர்கள் இருந்தாலும் , ஆயிரம் முரன்பாடுகள் இருந்தாலும்,
                 "அஞ்சல் ஊழியருக்கான சேவையில், அவர் தம் குடும்பத்தையும் புறம் தள்ளி தன் வாழ்நாள் முழுமையும் அர்ப்பணித்தார்" என்ற உண்மையை உணர்ந்து நாமும்,
"தொழிலாளி வர்க்க உரிமைக்காக முழுமையாக அர்ப்பணிக்க சபதமேற்ப்போம்.
தோழமையுடன்,
உங்கள் கண்ணன்.

Friday, October 21, 2016

NFPE-P4
சென்னை நகர மண்டல,
கோட்ட / கிளை செயலாளர்கள் கூட்டம். 20.10.2016 மதியம்.

மாநில மாநாட்டு வேலைகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக அவசர கூட்டம் 20.10.2016 மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை அண்ணாசாலை அஞ்சலகத்தில் மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தோழர்கள்,
G.கண்ணன், மாநில செயலாளர்,
S.ஜோதிமணி, துணை மாநில செயலாளர்,
M.நடராஜன், மாநில உதவி தலைவர்,
G.சுரேஷ்பாபு, மாநில உதவி செயலாளர்,
S.ரவிச்சந்திரன், மாநில பொருளாளர்,
R.பரமானந்தம், மாநில உதவி பொருளாளர்,
S.வாசுதேவன், மாநில தனிக்கையாளர்,
R.சீனிவாசன், கோட்ட செயலாளர் அண்ணாசாலை,
S.வேதகிரி, கோட்ட செயலாளர் வடசென்னை,
M.நாராயணன் கோட்ட தலைவர், மத்திய சென்னை,
R.வெங்கட்டரமணி, மத்திய சென்னை,
R.முனுசாமி, மத்திய சென்னை,
P.பிரசன்னா வெங்கடேஷ், தாம்பரம் ஆகிய தோழர்கள்
கலந்து கொண்டார்கள்.

மாநாட்டு நன்கொடை முதல் தவனையாக ரூபாய் 15,000 யை சென்னை மத்திய கோட்ட செயலாளரும், மாநில உதவி பொருளாளருமான தோழர் R.பரமானந்தம் அவர்கள் மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்களிடம் வழங்கினார்கள். அவர்களுக்கு மாநிலசங்கம் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

அதே போல் சென்னை GPO கோட்டம் சார்பாக விளம்பரத்திற்கான வசூல் ரூபாய் 6000 க்கான காசோலையை  கோட்ட தலைவரும், மாநில உதவி தலைவருமான தோழர் M.நடராஜன் அவர்கள் வழங்கினார்.
அவர்களுக்கும் மாநில சங்கம் நன்றியும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

பாண்டிச்சேரி கோட்டம் ஒவ்வோரு உறுப்பினருக்கும் ரூபாய் 1000/ என்ற அடிப்படையில் 60 உறுப்பினர்களில் இதுவரை ரூபாய் 45,000/ வசூல் செய்து சாதனை படைத்துள்ளார்கள். அவர்களை மனதார பாராட்டுவோம்.

மற்ற கோட்ட / கிளை செயலாளர்களும் மாநாட்டு வசூலை விரைந்து முடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

G.கண்ணன்,
மாநில செயலாளர்.


GDS ஊழியர்களுக்கு ரூபாய் 7000/ அடிப்படையில் 2014-2015 க்கான போனஸ் அரியர்ஸ் வழங்கிட கோரியும்,

கேஷுவல் ஊழியர்களுக்கு 1.1.2006 முதல் திருத்தப்பட்ட ஊதியத்திற்கான நிலுவைத் தொகை வழங்கிட கோரியும்,

Postal JCA (NFPE/FNPO) அறைகூவலின் அடிப்படையில், CPMG அலுவலகம் முன் (சென்னை) இன்று (20.10.2016) காலை முதல் மாலை வரை  தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு G.கண்ணன், கன்வீனர் COC NFPE மற்றும் P.குமார், கன்வீனர் COC FNPO ஆகிய தோழர்கள் கூட்டுத்தலைமை ஏற்று நடத்தினர்.

தோழர் S.சந்தோஷ்குமார், அகில இந்திய தலைவர், கணக்கு பிரிவு சங்கம், NFPE அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்.

தோழர்கள்,
S.நூர்முகமது, EX.GS. R4 FNPO,
R.B.சுரேஷ், மாநில செயலாளர் கணக்குபிரிவு, NFPE,
P.கோதண்டராமன், மாநில செயலாளர், GDS FNPO,
J.தேவன், மாநில தலைவர் R4, NFPE,
M.பன்னீர்செல்வம், மாநில தலைவர் P4, NFPE,
மணவாளன், மாநில பொருளாளர் P4, FNPO,
K.ரமேஷ், மாநில செயலாளர் R3, NFPE,
C.P.குணசேகரன், மாநில செயலாளர் Admin, FNPO,
B.பரந்தாமன், மாநில செயலாளர் R4, NFPE,
V.ரவிச்சந்திரன் மாநில செயலாளர் Admin, NFPE,
R.தன்ராஜ், மாநில செயலாளர், AIPEU-GDS-NFPE,
N.கோபாலகிருஷ்ணன் EX.WP/P3 , NFPE,
D.சிவகுருநாதன் மாநில தலைவர் கேஷுவல் ஊழியர்சங்கம், NFPE மற்றும் மாநில சங்க நிர்வாகிகள், கோட்ட/கிளை சங்க நிர்வாகிகள் போராட்ட கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள்.

தோழர் S.தியாகராஜன், மாபொது செயலாளர் FNPO அவர்கள் நிறைவுரையாக நீண்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.

தோழர் S.சிரிதரன் மாநில செயலாளர் R4, FNPO அவர்கள் நன்றி கூற தர்ணா போராட்டம் முடிவடைந்தது.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்....

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
G.கண்ணன்,
கன்வீனர்,
COC - NFPE.

Thursday, August 25, 2016

தி.நகர் தலைமை அஞ்சல் அதிகாரியின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம். 24.8.2016 மதியம் 1.00 மணி முதல் நடை பெற்றது. NFPE, FNPO வை சார்ந்த அஞ்சல் மூன்று,நான்கு GDS
ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

CL கேட்டாள் EL கொடுப்பது, இல்லையானால் விடுப்பே கொடுப்பதில்லை.

ஒரு பெண் தோழியர் தன் அம்மாவிற்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி விடுப்பு கேட்டால் மனசாட்சியோ, மனிதாபிமானமோ இல்லாத இந்த பெண் அதிகாரி விடுப்பு கொடுக்க மறுத்து விட்டார். இறுதியில் அந்த பெண் ஊழியரின் அம்மா இறந்தே விட்டார். கடைசியாக தாயிடம் பேச முடியாமல் உடலை மட்டும் பார்த்து வந்தார்.
இப்படிப்பட்ட  இரக்கமே இல்லாத அதிகார வெறிபிடித்த அகங்காரம் தலைக்கேரிய அதிகார வர்க்கத்தை தூக்கி எரிவோம்...

Monday, August 22, 2016

LGO தேர்வு முடிவுகளை உடனே வெளியிட கோரி CPMG அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION
Postmen & MTS
Tamil Nadu Circle, Roypattah, Chennai – 600 014
 Chennai – 600 014
To  Dated – 20.08.2016
 The CPMG,
 TamilNadu Circle,
 Chennai – 600002.

 Sir,
Sub:  Expedite the release of LGO Exam result – Reg

              It is brought to the notice of our union about the inordinate delay in releasing the LGO exam results in Tamil Nadu circle.
 
 Our staff are very much anxious and keen to know the result.

 We are informed that the results of the LGO exam have already been released in many circles

 There was similar delay in releasing LGO exam results in previous years also.

 Therefore we request circle administration to expedite the process of LGO Exam results without further delay.

Thanking You

Yours faithfully
 G. Kannan
 Circle Secretary
 AIPEU- P4
 Tamil Nadu circle.
தோழியர் RK.நாகஜோதி அஞ்சல் அதிகாரி அவர்களுக்கு நன்றி..

மேட்டுப்பாளையம் கிளை மாநாட்டில் நமது மாநில மாநாட்டிற்கு நன்கொடை ரூபாய் 500
யை தோழியர் RK.நாகஜோதி HPM அவர்கள் மாநில செயலாளரிடம் வழங்கினார்.

மாநாட்டிற்கான முதல் நன்கொடை இது.
மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.

Sunday, August 21, 2016

அஞ்சல் நான்கின் மேட்டுப்பாளையம் கிளை மாநாடு மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலகத்தில் கிளை தலைவர் தோழர் V.முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக சங்க கொடியை மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
கிளை தலைவர் : தோழர் V.முருகேசன் தபால்காரர் மேட்டுப்பாளையம்.

கிளை செயலாளர்: M.பாலசுப்பிரமணி தபால்காரர் மேட்டுப்பாளையம்.

பொருளாளர்: E.சின்னதுரை தபால்காரர் மேட்டுப்பாளையம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.


Friday, August 5, 2016

தமிழ் மாநில மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புகுழு
எண்: 1/8/2016  தேதி: 3.8.2016
செப்டம்பர்-2 வேலைநிறுத்தத்தை ஆதரிப்போம்!
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சம்மேளனங்கள், மகாசம்மேளனங்கள், மாநில அரசு ஊழியர் சம்மேளனம், வங்கிகள், இன்ஷ்யுரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் கூட்டாக செப்டம்பர்-2 அன்று ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இரண்டாண்டுக்கும்  மேற்பட்ட நரேந்திரசிங் மோடி தலைமையிலான மத்திய NDA அரசு பின்பற்றி வரும் உலகமய – தாராளமய – தனியார் மயக் கொள்கைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது. நிரந்தர ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்வதும், மாறாக காண்ட்ராக்ட் உள்ளிட்ட உரிமைகளற்ற அத்துக்கூலி முறைகள் அதிகரித்துக் கொண்டே வருவதும் தான் அரசுத் துறை, பொதுத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் இன்றைய கதி. குறைந்த பட்ச ஊதியப் பாதுகாப்பும் இல்லாமல் கோடிக்கணக்கான அமைப்பு சாரா ஊழியர்கள் கடும் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அரசுத் துறை, பொதுத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் கூட தனியாருக்கு பங்குகள் விற்கப்பட்டு தனியார் ஆதிக்கத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. அனைத்து மட்டங்களிலும் PPP என்ற பெயரில் தனியார் பொதுத்துறை கூட்டு ஏற்பாடுகள் என்ற போர்வையிலும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் பெருகிவருகிறது. இந்நிலையில் ஏற்கனவே பணியாற்றி வரும் நிரந்தரத் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளும், தொழிலாளர் நல ஏற்பாடுகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கம் வைக்கும் தலைவர்களும் முன்னணி ஊழியர்களும் பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
தாக்குதலின் வேகம் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் மீதும் பாய்ந்துள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைப்படியாக முதலீடு செய்யப்படுவது கூட கண்காணிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழுவே சுட்டிக்காட்டியுள்ளது. இறந்து போன ஏராளமான புதிய பென்ஷன் திட்டம் சார்ந்த ஊழியர்களின் குடும்பங்கள் பென்ஷன் எதுவுமின்றியும், சமூகப் பாதுகாப்பே இல்லாததால் தெருக்களில் வாடும் நிலையும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நிலைமைகள் அனைத்தையும் பரிசீலித்த மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து சம்மேளனங்கள், சங்கங்களின் புதுடில்லி தேசிய மாநாடு, மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட தொழிலாளர்களின் அடிப்படையான கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்ததுடன், நாடு தழுவிய இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் அறைகூவல் விடுத்தது. உச்சகட்டமாக செப்டம்பர்-2 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளது.
தமிழ் மாநில மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பர்-2 வேலைநிறுத்தத்திற்கு  முழு ஆதரவைத் தெரிவிக்கின்றது. அத்துடன் செப்டம்பர்-2 அன்று முற்பகலில் தலைநகர் சென்னையிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பல்வேறு ஓய்வூதியர் அமைப்புகளின் சார்பில் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி போராடும் தொழிலாளி வர்க்கத்திற்கு நம் ஆதரவைத் தெரிவிப்பதென்ற முடிவினையும் ஒருங்கிணைப்புக் குழு எடுத்துள்ளது. மிக சக்தியாகவும் வெற்றிகரமாகவும் மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டங்களை செப்டம்பர்-2 அன்று காலையில் நடத்துமாறு தமிழ் மாநில ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து ஓய்வூதியர் அமைப்புகளையும் கேட்டுக்கொள்கிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
N.L.ஸ்ரீதரன்  அ.சுந்தரம்
     தலைவர் பொதுச்செயலர்

Monday, August 1, 2016

NFPE-P4
அகில இந்திய அஞ்சல் ஊழியர் நான்காம் பிரிவு தமிழ் மாநில சங்கத்தின், சென்னை பெருநகர மண்டல கோட்ட கிளை செயலாளர்கள் கூட்டம் 31.7.2016 காலை 11 மணி அளவில் பூங்காநகர் அஞ்சலகத்தில் மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் மண்டல செயலாளர் தோழர் S.ஜோதிமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நமது முதுபெரும் தலைவர் அண்ணன் ஏஜிபி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். மற்றும் நமது அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர் P.திருமகன் அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

பொருள்;
1. மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக..
2. அகில இந்திய செயற்குழு கூட்டம் தமிழகத்தில் நடத்துவது தொடர்பாக...
3. மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் மாநில, அகில இந்திய மாநாடுகள் நடத்துவது தொடர்பாக...

கலந்து கொண்ட மாநில சங்க நிர்வாகிகள்:
1. தோழர் M.பன்னீர்செல்வம், மாநில தலைவர்,
2.தோழர் M.நடராஜன், மாநில உதவி தலைவர்,
3. தோழர் G.கண்ணன், மாநில செயலாளர்,
4. தோழர் S.ஜோதிமணி, மாநில துணை செயலாளர்,
5. தோழர் G.சுரேஷ்பாபு, மாநில உதவி செயலாளர்,
6. தோழர் S.ரவிச்சந்திரன், மாநில பொருளாளர்,
7. தோழர் R.பரமானந்தம், மாநில உதவிபொருளாளர்,
8. தோழர் S.வாசுதேவன் மாநில தனிக்கையாளர்.

கலந்து கொண்ட கோட்ட செயலாளர்கள்:
1. தோழர் S.வேதகிரி, சென்னை வடகோட்டம்,
2. தோழர் A.பெருமாள், வேலூர்,
3. தோழர் T.மகேந்திரன், காஞ்சிபுரம்,
4. தோழர் J.புருஷோத்தமன், சென்னை GPO,
5. தோழர் V.சந்தானம், சென்னை அயல் நாட்டஞ்சல்,
6. தோழர் M.நாராயணன், சென்னை மத்திய கோட்டம்(பொருப்பு)
7. தோழர் N.செல்வராஜ், தென் சென்னை கோட்டம்(பொருப்பு)
8. தோழர் P.பிரசன்னா வெங்கடேஷ், தாம்பரம் கோட்டம்(பொருப்பு)
9. தோழர் M.பன்னீர்செல்வம், பாண்டிச்சேரி.

வர இயலாத கோட்ட கிளைகள்:
கோட்டங்கள் நான்கு (4),
கிளைகள் இரண்டு(2).

இதே தேதியில் Postman to PA LGO தேர்வு நடைபெற்றதால், தேர்வில் கலந்து கொண்ட காரணத்தினால் கூட்டத்தில் பங்கெடுக்க முடியாமல் போன கோட்ட /கிளை செயலாளர்கள்,
1.தோழர் R.சீனிவாசன், திருவண்ணாமலை,
2. தோழர் N.தனஞ்செயன், அரக்கோணம்,
3. தோழர் காசி, ஆரணி கிளை.

முடிவுகள்:
* அகில இந்திய செயற்குழு கூட்டம்  26,27 -12 - 2016 ஆகிய தேதிகளில், திண்டிவனம் நகரில் நடத்துவது.

* நமது மாநில செயற்குழு கூட்டம் 28.12.2016 அன்று திண்டிவனம் நகரில் நடத்துவது.

* நமது மாநில மாநாடு 29.12.2016 மற்றும் 30.12.2016 ஆகிய இரண்டு நாட்கள் திண்டிவனம் நகரில் நடத்துவது.

* மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநாட்டு நன்கொடை தொகையை இதுவரை கொடுக்காதவர்கள் வருகிற 4.8.2016 தேதிக்குள் கோட்ட செயலாளர்கள் மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும்.

* சார்பாளர் மற்றும் பார்வையாளர் கட்டணம் ரூபாய் ஆயிரம் (1000).

* மாநாடு மற்றும் அகில இந்திய செயற்குழு நடத்துவதற்காக நன்கொடை புத்தகங்கள் அச்சடிப்பது.

* மாநிலத்தில் அனைத்துக் கோட்டங்களும் வசூல் செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூபாய் 500 வீதம் அந்தந்த கோட்ட கிளை செயலாளர்கள்
பொறுப்பெடுத்து அக்டோபர் இறுதிக்குள் மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும்.
(நன்கொடை பத்தகங்கள் 20.8.16 தேதிக்குள்
அனுப்பி வைக்கப்படும்)

* சார்பாளர் மற்றும் பார்வையாளர் கட்டணம் செலுத்தும் அனைவருக்கும் நமது சங்க முத்திரை வரைந்த டிசர்ட் மற்றும் தொப்பி வழங்கிட வேண்டும்.
(இந்த பொறுப்பை இப்பொழுதே உடனடியாக ஏற்றுக் கொண்டு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த மாநில அமைப்பு செயலாளரும், திருப்பூர் கோட்ட செயலாளருமான தோழர் V.தர்மலிங்கம் அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்)

அருமை தோழர்களே,
நமக்கு மாநில சங்கம் ஒப்படைத்திற்கும் இக்களப்பணிகளை விரைந்து முடிப்போம்.
நம்மால் முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை என்ற இருமாப்போடு களமிறங்குவோம் என் இதய தோழனே!!
G.கண்ணன்,
மாநில செயலாளர்.




Wednesday, July 6, 2016

NFPE                  PJCA                  FNPO
11.7.2015 வேலைநிறுத்த விளக்க கூட்டம்.

05.7.2016 மாலை 6.30 மணிக்கு திருச்சி தலைமை அஞ்சலகத்தில்,
தோழர் J.ஜானகிராமன் கோட்ட தலைவர் P3 NFPE, தோழர் S.ரமேஸ்குமார் தலைவர் R3 NFPE, ஆகியோர் தலைமையில் வேலைநிறுத்த விளக்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தோழர் மருதநாயகம் கோட்ட செயலாளர் P3 NFPE அவர்கள் வரவேற்புரை நல்கினார்.

வேலைநிறுத்த விளக்கவுரை;
தோழர்கள்,
P.குமார்           கன்வீனர் COC FNPO,
G.கண்ணன்  கன்வீனர் COC NFPE,
P.சுகுமார் மாநில செயலாளர் P4 FNPO,
R.தன்ராஜ் மாநில செயலாளர் GDS NFPE,
K.இளங்கோவன் Admin,
S.கோவிந்தராஜன் மண்டல செயலாளர் P4 NFPE,
M.கவனகன் மா.உ.செயலாளர் R3 NFPE,
R.நாராயணசாமி தலைவர் R4 FNPO,
T.குணசேகரன் கோட்ட செயலாளர் R3 NFPE,
T.P.ரமேஷ் கோட்ட செயலாளர் R4 NFPE,,
V.பாஸ்கர் கோட்ட செயலாளர் P3 FNPO,
விஷ்ணுதேவன் மாநில பொருளாளர் GDS NFPE,
ஹரிராமன் மண்டல செயலாளர் NUGDS, ஆகியோர் வேலைநிறுத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினர்.

தோழர் P.ஆறுமுகம் மண்டல செயலாளர் P4 FNPO  அவர்கள் நன்றி கூற கூட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது.




Tuesday, July 5, 2016

NFPE.                          JCA                     FNPO.
        11.7.2016 வேலைநிறுத்த விளக்க கூட்டம்.
                                                           04.7.2016
                                              கோயம்புத்தூர்
தோழர்களே!
                   11 ஜூலை 16 முதல் நடைபெற இருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்ட விளக்க கூட்டம் 04.7.2016 மாலை 6.00 மணி அளவில் கோவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் மூன்று கோட்ட தலைவர் தோழர் R.வேலுச்சாமி, அஞ்சல் நான்கு கோட்ட தலைவர் தோழர் K.மகேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அஞ்சல் மூன்றின் கோட்ட செயலாளர் தோழர் D.எபநேசர் காந்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

விளக்கவுரை:
தோழர் G.கண்ணன், கன்வீனர், COC NFPE
தோழர் KR.கணேசன், மாநில தலைவர் R3 NFPE
தோழர் A.ராஜேந்திரன், மண்டல செயலாளர் P3 NFPE
தோழர் H.ஶ்ரீதரன் மண்டல செயலாளர் P4 NFPE
தோழர் S.கருணாநிதி முன்னாள் JCM உறுப்பினர் NFPE
தோழர் V.தர்மலிங்கம் மாநில அமைப்பு செயலாளர் P4 NFPE, ஆகிய தோழர்கள் வேலைநிறுத்த விளக்கவுரையாற்றினர்.

தோழர் S.கணபதி சுப்பிரமணியன் கோட்ட செயலாளர் PSD P4 NFPE அவர்கள் நன்றி கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கோட்ட, கிளை செயலாளர்கள்.
தோழர் M.அசோகன் R4, கோவை
தோழர் B.சிவகுமார் P4,ஈரோடு
தோழர் A.சேகர் P3, நீலகிரி ஊட்டி
தோழர் ஷேசாஸ்திரி P4, ஶ்ரீரங்கம்
தோழர் M.பாலசப்ரமணியன் P4 மேட்டுப்பாளையம்
தோழர் A.கிருஷ்ணசாமி P4 பொள்ளாச்சி ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
G.கண்ணன்
மாநில செயலாளர்.





Saturday, July 2, 2016

                                                                       NFPE
11.7.2016 வேலைநிறுத்த விளக்க கூட்டங்கள்.

4.7.16 கோயம்புத்தூர்
5.7.16 திருச்சி
6.7.16 மதுரை
8.7.16 சென்னை
தோழர்களே மேல்கண்ட விளக்க கூட்டங்களுக்கு 
NFPE, FNPO சங்கத்தின் சார்பில் மாநில 
செயலாளர்கள் கலந்து கொள்வார்கள்.

கூட்டம் நடைபெறும் நகரில் அந்தந்த 
மண்டலத்தை சார்ந்த அனைத்து கோட்ட 
உறுப்பினர்களும் வந்து சேர வேண்டும்.
கோட்ட/கிளை செயலாளர்கள் போராட்ட விளக்க 
கூட்டத்திற்கு ஊழியர்களை அணிதிரட்டி அழைத்து 
வரவேண்டும்.

மாநில சங்க நிர்வாகிகள் கோட்ட 
செயலாளர்களிடம் தொடர்ந்து தொடர்பில் 
இருக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.
G.கண்ணன்
மாநில செயலாளர்
NFPE-P4
சென்னை-14

Thursday, June 30, 2016

NFPE அஞ்சல் நான்கு மத்திய செயற்குழு கூட்டம் 
26.6.16 மற்றும் 27.6.16 இரண்டு நாட்கள் Jasidih நகர் J
harkanth மாநிலத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.
கூட்டத்தில் தமிழகம் சார்பில் அகில இந்திய உதவி 
பொது செயலாளர் தோழர் P.திருமகன் அவர்களும், ]
தமிழ் மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் 
அவர்களும் கலந்து கொண்டனர்.

26.06.2016.
முதல் நாள் நிகழ்ச்சி காலை கொடியேற்றத்துடன் 
துவங்கியது. தேசிய கொடியை முன்னாள் P4 
பொதுச் செயலாளர் தோழர் தேஷ்ராஜ் சர்மா 
அவர்களும், சம்மேளன கொடியை மத்திய அரசு 
ஊழியர் மகாசம்மேளனத்தின் பொது செயலாளர் 
தோழர் M.கிருஷ்ணன் அவர்களும், சங்க கொடியை 
அகில இந்திய தலைவர் தோழர் பாலகிருஷ்ண 
சாக்லே அவர்களும் ஏற்றி வைத்தனர்.
பின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொது அரங்கம்.
கலை நிகழ்ச்சியுடன் பொது அரங்கு ஆரம்பமானது. 
தோழர் M.கிருஷ்ணன் அவர்கள் துவக்கவுரை 
நிகழ்த்தினார்.
பின்பு ஜார்கண்ட் PMG அவர்களும் SSP அவர்களும் 
வாழ்த்தி பேசினர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் 
வேலையறிக்கையை பொது செயலாளர் தோழர் 
R.சீத்தாலெட்சுமி அவர்கள் சமர்பித்தார்கள். 
அறிவித்த அஜந்தாக்களின் மீதும், 
வேலையறிக்கையின் மீதும் மாநில செயலாளர்கள் 
விவாதம் தொடர்ந்தது. மாலை 7.30 மணியளவில் 
இரவு உணவு இடைவேளைக்காக கூட்டம் ஒத்தி 
வைக்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

27.06.2016.மீண்டும் காலை மாநில செயலாளர்களின் விவாதம் 
தொடர்ந்தது. தமிழகத்தின் சார்பில் மாநில 
செயலாளர் தோழர் G.கண்ணன் விவாதத்தில் பங்கு 
கொண்டார். கீழ்க்கண்ட விசயங்களை பகிர்ந்து 
கொண்டார்.

* நமது மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட 
தீர்மானங்கள், 11.7.16 வேலைநிறுத்தம், Membership 
verification, GDS NFPE உறுப்பினர் சேர்ப்பு, casual labour 
union formation division level,

* பொதுச்செயலாளர் வேண்டுகோளை ஏற்றுஅடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தை தமிழகத்தில் 
நடத்துவது என தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக 
அறிவிக்கப்பட்டது.
* Post Men Cadre Restructure தொடர்பாக தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட Proposal முன் வைக்கப் பட்டது.
1st promotion,
Stg PM and Head Post Men - HSG-1
2nd promotion,
Cash Overseers and Mail Overseers - HSG-2
ஆக பதவி உயர்வு கொடுக்க வேண்டும்.
மற்றும் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பின் மத்திய சங்க நிர்வாகிகள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். நமது மாநிலத்தில் இருந்து உதவி பொதுச் செயலாளர் தோழர் P.திருமகன் உரையாற்றினார். கீழ்க்கண்ட பொருள்களின் மீது விவதித்தார்.
* அறிக்கையின் மீது விவாதத்தை மாநில செயலாளர்கள் இன்னும் செழுமைப்படுத்தியிருக்க வேண்டும்.
* 11.7.2016 வேலை நிறுத்தம் 100℅ வெற்றி பெற மாநில செயலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
* GDS NFPE சங்கத்திற்கும், அஞ்சல் நான்கு சங்கத்திற்கும் தொப்புள்கொடி உறவு உள்ளதால் நாம் முன்னின்று சகோதர அமைப்புகளோடு இணைந்து AIPEU GDS சங்கத்திற்கு உறுப்பினர் சேர்ப்பை நடத்திட வேண்டும்.
* Cadre Restructure விசயத்தில் MTS தோழர்களுக்கும் seniority அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
* வேலூர் கோட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனையான, வேலூர் கோட்டை அஞ்சலகத்திலிருந்து பட்டுவாடா பிரிவை தற்காலிகமாக வேலூர் HO விற்கு மாற்றம் செய்யப்பட்டது. பட்டுவாடா பிரிவை மீண்டும் வேலூர் கோட்டை அஞ்சலகத்திற்கே மாற்றிட அகில இந்திய சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்பு R3 பொதுச் செயலாளர் தோழர் கிரிராஜ் சிங் அவர்கள் வாழ்த்தி பேசினார்.
இறுதியாக, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தோழர்
M.கிருஷ்ணன் அவர்கள்,
"வேலைநிறுத்தம் உறுதி"
"தயாராகுங்கள் தோழர்களே"
என முடித்தார். மாலை 5.30 மணி அளவில் கூட்டம் முடிந்தது.
G.கண்ணன்,
மாநில செயலாளர்.