26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, October 27, 2016

Postal JCA
Tamil nadu Circle.

NFPE -FNPO அனைத்து மாநில செயலாளர்களின்  அவசரக்கூட்டம்.. 27.10.2016 இன்று மாலை 5.30 மணி. இடம் அண்ணாசாலை.

பொருள்: ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அஞ்சல் நிர்வாகம் ஊழியர்களை பணிக்கு வரச்சொல்வது சம்பந்தமாக... முடிவு எடுக்க..

தோழர்களே!
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணிக்கு வரச்சொல்லும் உத்தரவை கண்டித்தும், ரத்து செய்ய கோரியும் நேற்று 26.10.2016 அன்று PJCA சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வெகு சிறப்பாக நடந்துள்ளது. அனைத்து கோட்ட/கிளை செயலாளர்களுக்கும் NFPE , FNPO JCA சார்பாக புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .

மேற்கு மண்டல PMG அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மனிதாபிமானத்தோடும், ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் தீபாவளி மற்றும் அடுத்த ஞாயிற்று கிழமையில் மேற்கு மண்டலம் மற்றும் தென்மண்டல ஊழியர்கள் பணிக்கு வர வேண்டியதில்லை என்ற உத்தரவிட்ட மேற்கு மண்டல PMG அவர்களை நன்றியுடன் வாழ்த்துகிறோம்.

இதற்கிடையில்,
இது விசயம் சம்பந்தமாக 26.10.16 காலை 10.30 மணிக்கு பேசலாம் என்று   PMG MM அவர்கள் PJCA கன்வீனர்களை அழைத்ததின் அடிப்படையில் தோழர்கள் P.குமார் தலைவர் PJCA FNPO,  G.கண்ணன், கன்வீனர் PJCA NFPE, P.சுகுமாறன் மாநில செயலாளர் FNPO - P4 ஆகியோர் சென்றோம்.

நிர்வாக தரப்பில்  PMG MM மற்றும் DPS Head Quarter அவர்களும் இருந்தார்கள். சுமார் அரை மணி நேரம் பேசினோம். பின்பு CPMG யுடன் பேசிவிட்டு மதியம் பதில் சொல்வதாகவும்,  அதுவரை காத்திருக்கமாறும் சொன்னார்கள். மாலை 5.00 வரை CPMG அலுவலகத்தில் இருந்தோம். இது வரை எந்த தகவலும் இல்லாத சூழ்நிலையில் இன்று மாலை PJCA, ஊழியர்களின் கஷ்டத்தை ஒழிக்கும் படியான, சரியான முடிவை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமை வாழ்த்துக்களுடன்,
P.குமார்.                                         G.கண்ணன்,
தலைவர்,                                        கன்வீனர்,
PJCA.                                                PJCA

No comments:

Post a Comment