26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, October 21, 2016

NFPE-P4
சென்னை நகர மண்டல,
கோட்ட / கிளை செயலாளர்கள் கூட்டம். 20.10.2016 மதியம்.

மாநில மாநாட்டு வேலைகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக அவசர கூட்டம் 20.10.2016 மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை அண்ணாசாலை அஞ்சலகத்தில் மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தோழர்கள்,
G.கண்ணன், மாநில செயலாளர்,
S.ஜோதிமணி, துணை மாநில செயலாளர்,
M.நடராஜன், மாநில உதவி தலைவர்,
G.சுரேஷ்பாபு, மாநில உதவி செயலாளர்,
S.ரவிச்சந்திரன், மாநில பொருளாளர்,
R.பரமானந்தம், மாநில உதவி பொருளாளர்,
S.வாசுதேவன், மாநில தனிக்கையாளர்,
R.சீனிவாசன், கோட்ட செயலாளர் அண்ணாசாலை,
S.வேதகிரி, கோட்ட செயலாளர் வடசென்னை,
M.நாராயணன் கோட்ட தலைவர், மத்திய சென்னை,
R.வெங்கட்டரமணி, மத்திய சென்னை,
R.முனுசாமி, மத்திய சென்னை,
P.பிரசன்னா வெங்கடேஷ், தாம்பரம் ஆகிய தோழர்கள்
கலந்து கொண்டார்கள்.

மாநாட்டு நன்கொடை முதல் தவனையாக ரூபாய் 15,000 யை சென்னை மத்திய கோட்ட செயலாளரும், மாநில உதவி பொருளாளருமான தோழர் R.பரமானந்தம் அவர்கள் மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்களிடம் வழங்கினார்கள். அவர்களுக்கு மாநிலசங்கம் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

அதே போல் சென்னை GPO கோட்டம் சார்பாக விளம்பரத்திற்கான வசூல் ரூபாய் 6000 க்கான காசோலையை  கோட்ட தலைவரும், மாநில உதவி தலைவருமான தோழர் M.நடராஜன் அவர்கள் வழங்கினார்.
அவர்களுக்கும் மாநில சங்கம் நன்றியும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

பாண்டிச்சேரி கோட்டம் ஒவ்வோரு உறுப்பினருக்கும் ரூபாய் 1000/ என்ற அடிப்படையில் 60 உறுப்பினர்களில் இதுவரை ரூபாய் 45,000/ வசூல் செய்து சாதனை படைத்துள்ளார்கள். அவர்களை மனதார பாராட்டுவோம்.

மற்ற கோட்ட / கிளை செயலாளர்களும் மாநாட்டு வசூலை விரைந்து முடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

G.கண்ணன்,
மாநில செயலாளர்.


No comments:

Post a Comment