26.03.2015 ONE DAY STRIKE News Flash

Monday, August 1, 2016

NFPE-P4
அகில இந்திய அஞ்சல் ஊழியர் நான்காம் பிரிவு தமிழ் மாநில சங்கத்தின், சென்னை பெருநகர மண்டல கோட்ட கிளை செயலாளர்கள் கூட்டம் 31.7.2016 காலை 11 மணி அளவில் பூங்காநகர் அஞ்சலகத்தில் மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் மண்டல செயலாளர் தோழர் S.ஜோதிமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நமது முதுபெரும் தலைவர் அண்ணன் ஏஜிபி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். மற்றும் நமது அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர் P.திருமகன் அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

பொருள்;
1. மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக..
2. அகில இந்திய செயற்குழு கூட்டம் தமிழகத்தில் நடத்துவது தொடர்பாக...
3. மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் மாநில, அகில இந்திய மாநாடுகள் நடத்துவது தொடர்பாக...

கலந்து கொண்ட மாநில சங்க நிர்வாகிகள்:
1. தோழர் M.பன்னீர்செல்வம், மாநில தலைவர்,
2.தோழர் M.நடராஜன், மாநில உதவி தலைவர்,
3. தோழர் G.கண்ணன், மாநில செயலாளர்,
4. தோழர் S.ஜோதிமணி, மாநில துணை செயலாளர்,
5. தோழர் G.சுரேஷ்பாபு, மாநில உதவி செயலாளர்,
6. தோழர் S.ரவிச்சந்திரன், மாநில பொருளாளர்,
7. தோழர் R.பரமானந்தம், மாநில உதவிபொருளாளர்,
8. தோழர் S.வாசுதேவன் மாநில தனிக்கையாளர்.

கலந்து கொண்ட கோட்ட செயலாளர்கள்:
1. தோழர் S.வேதகிரி, சென்னை வடகோட்டம்,
2. தோழர் A.பெருமாள், வேலூர்,
3. தோழர் T.மகேந்திரன், காஞ்சிபுரம்,
4. தோழர் J.புருஷோத்தமன், சென்னை GPO,
5. தோழர் V.சந்தானம், சென்னை அயல் நாட்டஞ்சல்,
6. தோழர் M.நாராயணன், சென்னை மத்திய கோட்டம்(பொருப்பு)
7. தோழர் N.செல்வராஜ், தென் சென்னை கோட்டம்(பொருப்பு)
8. தோழர் P.பிரசன்னா வெங்கடேஷ், தாம்பரம் கோட்டம்(பொருப்பு)
9. தோழர் M.பன்னீர்செல்வம், பாண்டிச்சேரி.

வர இயலாத கோட்ட கிளைகள்:
கோட்டங்கள் நான்கு (4),
கிளைகள் இரண்டு(2).

இதே தேதியில் Postman to PA LGO தேர்வு நடைபெற்றதால், தேர்வில் கலந்து கொண்ட காரணத்தினால் கூட்டத்தில் பங்கெடுக்க முடியாமல் போன கோட்ட /கிளை செயலாளர்கள்,
1.தோழர் R.சீனிவாசன், திருவண்ணாமலை,
2. தோழர் N.தனஞ்செயன், அரக்கோணம்,
3. தோழர் காசி, ஆரணி கிளை.

முடிவுகள்:
* அகில இந்திய செயற்குழு கூட்டம்  26,27 -12 - 2016 ஆகிய தேதிகளில், திண்டிவனம் நகரில் நடத்துவது.

* நமது மாநில செயற்குழு கூட்டம் 28.12.2016 அன்று திண்டிவனம் நகரில் நடத்துவது.

* நமது மாநில மாநாடு 29.12.2016 மற்றும் 30.12.2016 ஆகிய இரண்டு நாட்கள் திண்டிவனம் நகரில் நடத்துவது.

* மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநாட்டு நன்கொடை தொகையை இதுவரை கொடுக்காதவர்கள் வருகிற 4.8.2016 தேதிக்குள் கோட்ட செயலாளர்கள் மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும்.

* சார்பாளர் மற்றும் பார்வையாளர் கட்டணம் ரூபாய் ஆயிரம் (1000).

* மாநாடு மற்றும் அகில இந்திய செயற்குழு நடத்துவதற்காக நன்கொடை புத்தகங்கள் அச்சடிப்பது.

* மாநிலத்தில் அனைத்துக் கோட்டங்களும் வசூல் செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூபாய் 500 வீதம் அந்தந்த கோட்ட கிளை செயலாளர்கள்
பொறுப்பெடுத்து அக்டோபர் இறுதிக்குள் மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும்.
(நன்கொடை பத்தகங்கள் 20.8.16 தேதிக்குள்
அனுப்பி வைக்கப்படும்)

* சார்பாளர் மற்றும் பார்வையாளர் கட்டணம் செலுத்தும் அனைவருக்கும் நமது சங்க முத்திரை வரைந்த டிசர்ட் மற்றும் தொப்பி வழங்கிட வேண்டும்.
(இந்த பொறுப்பை இப்பொழுதே உடனடியாக ஏற்றுக் கொண்டு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த மாநில அமைப்பு செயலாளரும், திருப்பூர் கோட்ட செயலாளருமான தோழர் V.தர்மலிங்கம் அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்)

அருமை தோழர்களே,
நமக்கு மாநில சங்கம் ஒப்படைத்திற்கும் இக்களப்பணிகளை விரைந்து முடிப்போம்.
நம்மால் முடியாதது இவ்வுலகில் எதுவுமில்லை என்ற இருமாப்போடு களமிறங்குவோம் என் இதய தோழனே!!
G.கண்ணன்,
மாநில செயலாளர்.




No comments:

Post a Comment