26.03.2015 ONE DAY STRIKE News Flash

Wednesday, June 15, 2016

NFPE அஞ்சல் நான்கு தமிழ் மாநில சங்கத்தின் 

மாநில செயற்குழு கூட்டம் ஜுன் 10,11 2016 

ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் நகரில் 

வெற்றிகரமாக நடைபெற்றது.

மாநில சங்க நிர்வாகிகள் 18 பேரில் 16 பேர்களும், கோட்ட செயலாளர்கள் 49 பேரில் 43 பேர்களும், கிளை செயலாளர்கள் 20 பேரில் 10 பேரும், பார்வையாளர்களாக சுமார் 150 பேர்களும் கலந்து கொண்டனர்.
செயற்குழுவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அஞ்சல் நான்கின் முதுபெரும் தலைவரும், 37 ஆண்டுகள் மாநில செயலாளராக பணியாற்றியவருமான தோழர் AGP அவர்களும், நமது அகிலஇந்திய சங்கத்தின் உதவி செயலாளர் தோழர் P.திருமகன் அவர்களும், அஞ்சல் நான்கு முன்னாள் துணைமாநில செயலாளர் தோழர் D.கல்யாணராமன் அவர்களும், முன்னாள் மாநில தலைவர் தோழர் G.கிருஷ்ணன் அவர்களும், முன்னாள் P3 மாநில தலைவர் தோழர் ஶ்ரீவி அவர்களும், கேசுவல் லேபர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் D.சிவகுருநாதன் அவர்களும், முன்னாள் RJCM உறுப்பினர் தோழர் S.கருணாநிதி அவர்களும் கலந்து கொண்டனர்.
10.06.16 அன்று காலை சரியாக 11.00 மணிக்கு சம்மேளன கொடியை தோழர் D.கல்யாணராமன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
மாநில தலைவர் தோழர் M.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தென்மண்டல செயலாளர் தோழர் SB.ராஜமோகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
காலை முதல் மதியம் 2.30 மணிவரை சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் உரையாற்றினர். மாலை 4.00 மணிக்கு மீண்டும் செயற்குழு துவங்கியது. மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை சமர்பித்தார். மாநில பொருளாளர் தோழர் S.ரவிச்சந்திரன் அவர்கள் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாலை சரியாக 5.30 மணிக்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
11.6.16 காலை மீண்டும் சரியாக 10.00 மணிக்கு அவை கூடியது. வேலையறிக்கை மற்றும் அஜந்தாக்களின் மீதான விவாதத்தை மாநில துணை செயலாளர் தோழர் S.ஜோதிமணி அவர்கள் துவக்கி வைத்தார். பின்பு ஓரிரு கோட்ட செயலாளர்கள் தவிர அனைவரும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
தோழர் ஶ்ரீவி அவர்கள் மாநில சங்க செயல்பாட்டை பாராட்டி தோழர்கள் AGP, மாநில தலைவர் M.பன்னீர்செல்வம், மாநில செயலாளர் G.கண்ணன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இறுதியாக மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். தோழர் M.ராஜேந்திரன் தூத்துக்குடி கோட்ட செயலாளர் அவர்கள் நன்றி கூறினார். 
கூட்டம் இனிதே முடிந்தது.
அனைத்து கோட்ட கிளை செயலாளர் களுக்கும் நினைவு பரிசாக bag வழங்கப்பட்டது.
மத்திய அரசு மகா சம்மேளன அகில இந்திய மாநாட்டிற்கான நன்கொடை புத்தகங்கள் அனைத்து கோட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்ட து.
G.கண்ணன்
மாநில செயலாளர்.









No comments:

Post a Comment