NFPE-P4
பாராட்டு விழா
07.06.2015
மாநில செயலாளர் மற்றும் தென் மண்டல செயலாளர்
ஆகியோருக்கு விருதுநகர் கோட்டம் மற்றும் ராஜபாளையம்,
சிவகாசி கிளைகள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்ட
நினைவுப் பரிசு
தோழர்களே!
07.06.2015 அன்று ராஜபாளையம் கிளை துவக்க நிகழ்ச்சி காலை 10.00
மணி முதல் மதியம் 3.00 வரை ராஜபாளையம் அலுவலகத்தில் நடைபெற்றது.
மதிய உணவு இடைவேளைக்குப் பின் 4.00 மணிக்கு தோழர் G.கண்ணன் மாநில செயலாளர் NFPE-P4 மற்றும் தோழர் S.B.ராஜமோகன் தென் மண்டல செயலாளர் NFPE-P4 ஆகியோருக்கு விருதுநகர் கோட்டம் மற்றும் ராஜபாளையம், சிவகாசி கிளைகள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு தோழர் M.சுப்பையா கோட்ட தலைவர் NFPE-P4 அவர்கள்
தலைமை தாங்கினார். தோழர் M.சோலையப்பன் கோட்ட செயலாளர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பின் தோழர் G.கண்ணன் மாநில செயலாளர் மற்றும் தோழர் S.B.ராஜமோகன் தென் மண்டல செயலாளர் ஆகியோருக்கு
நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
தோழர் A.முருகேசன் முன்னாள் மாநில உதவித்தலைவர் NFPE P4,
தோழர் R.தர்மர் முன்னாள் கிளை செயலாளர் NFPE P4, சிவகாசி, தோழர் C.பெரியசாமி கோட்ட செயலாளர் NFPE-P4 கோவில்பட்டி
தோழர் தங்கப்பன் GDS-NFPE ராஜபாளையம்
தோழர் சிதம்பரம் GDS-NFPE ராஜபாளையம்
தோழர் பழனிகுமார் கிளை செயலாளர் GDS-NFPE ராஜபாளையம்.
தோழர் R.ஜெயராஜன் கோட்டசெயலாளர் NFPE-P4 PSD மதுரை ஆகியோர்
பாராட்டுரை வழங்கினார்கள்.
தோழர் G.கண்ணன் மாநில செயலாளர் NFPE-P4 மற்றும் தோழர் S.B.ராஜமோகன் தென் மண்டல செயலாளர் NFPE-P4 ஆகிய இருவரும்
ஏற்புரை நிகழ்த்தினார்கள்.
தோழர் P.துரைராஜ் புதிய கிளை தலைவர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து
வைத்தார்
தோழர் R.தர்மர் முன்னாள் கிளை செயலாளர் NFPE P4, சிவகாசி அவர்களால் வழங்கப்பட்ட நினைவு பரிசு (தோழர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய புத்தகம்)
No comments:
Post a Comment