NFPE - P4
தென் மண்டல DPS அவர்களுக்கு NFPE-P4 தமிழ்
மாநில சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
திண்டுக்கல் கோட்டம் பழனி கிளையின்
செயலாளர் தோழர் செந்தில்குமார் அவர்கள் LGO
தேர்வில் வெற்றி பெற்று 23.5.2016 அன்று Training
க்கு வருமாறு மதுரை PTC யில் இருந்து கடிதம்
வந்த பின்னரும் போஸ்ட்மாஸ்டர் முன் விரோதம்
காரணமாக தோழர் செந்தில்குமார் அவர்களை
அனுப்ப மறுத்து விட்டார்.
23, மற்றும் 24 தேதிகளில் திண்டுக்கல் கோட்ட
செயலாளர்கள் SSP யிடம் இது சம்பந்தமாக
பேசியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க
வில்லை.
பின்னர் அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர்
G.கண்ணன் அவர்கள் DPS, Madurai PTC Director
அவர்களிடம்அலைபேசியில் பிரச்சனையை
சொன்ன பின் பேசி தீரப்பதாக கூறினார்கள்.
இறுதியாக, 25.5.2016 அன்று தென் மண்டல
செயலர் தோழர் SB.ராஜமோகன் அவர்கள் தென்
மண்டல DPS மேடம் அவர்களை சந்தித்து
பிரச்சனையை சொன்ன உடன், உடனடியாக
தோழர் செந்தில் குமார் அவர்களை Training அனுப்ப
ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார்கள்.
இன்று 26.5.2016 DPS SR அவர்கள் திண்டுக்கல் லில்
நேரடியாக தலையிட்ட காரணத்தினால் தோழர்
செந்தில்குமார் அவர்கள் இன்று 26.5.16 ரிலீவாகி
Training செல்கிறார்.
பிரச்சனையில் உடனே தலையிட்டு நிவர்த்தி
செய்த DPS SR அவர்களுக்கு NFPE P4 தமிழ் மாநில
சங்கம் நன்றி யை தெறிவித்துக் கொள்கிறது.
G.கண்ணன்
மாநில செயலாளர்.
மாநில செயலாளர்.
No comments:
Post a Comment