26.03.2015 ONE DAY STRIKE News Flash

Sunday, May 17, 2015

NFPE-P4
அரக்கோணம் கோட்ட மாநாடு - 17.05.2015.
தோழர்களே!
                       AIPEU - PM & MTS சங்கத்தின் அரக்கோணம் கோட்ட 22 வது மாநாடு 
அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 17.5.2015 காலை 10.00 மணி 
அளவில் கோட்டதலைவர் தோழர் K.வேணுகோபால் அவர்கள் தலைமையில் 
நடைபெற்றது. 

                     முதல் நிகழ்ச்சியாக தேசியக்கொடியை முன்னாள் CCR மண்டல 
செயலாளர் தோழர் K.பத்மநாபன் அவர்கள் ஏற்றிவைத்தார். சம்மேளன கொடியை மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள்  ற்றிவைத்தார்.
தபால்காரர் சங்க கொடியை GDS கோட்ட செயலாளர் தோழர் டேவிட் துரைக்குமார் அவர்கள் ஏற்றிவைத்தார். 

                      தோழர் V.மாரிமுத்து அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

                     பின்பு ஈராண்டறிக்கை, வரவு செலவு கணக்குகள் முறையாக சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. 

                     புதிய நிர்வாகிகள் தேர்வு, மாநில மாநாடு மற்றும்  மத்திய சங்க மாநாட்டு சார்பாளர்கள் தேர்வை மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் நடத்தி வைத்தார். 
தலைவர் : தோழர் K.வேணுகோபால் 
செயலாளர் : தோழர் N.தனஞ்செழியன் 
பொருளாளர் : தோழர் G.பன்னீர்செல்வம் .

                    புதியதாக தேர்வு பெற்ற அனைத்து கோட்ட சங்க நிர்வாகிகளையும் P4 தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். 




No comments:

Post a Comment