26.03.2015 ONE DAY STRIKE News Flash

Monday, May 18, 2015

NFPE-P4


திருநெல்வேலி 36 வது கோட்ட மாநாடு 
10.05.2015
தோழர்களே!
                           NFPE - P4 நெல்லை கோட்ட 36 வது மாநாடு பாளை HO வில் தலைவர் தோழர் S.ஆறுமுகம் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக 
நடைபெற்றது. 

                           முதல்  நிகழ்ச்சியாக NFPE சம்மேளன கொடியை மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார். 


                          ஈராண்டு அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்குகள் முறையாக 
சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின் அவை முறையாக கூட்டப்பட்டு 
மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் புதிய நிர்வாகிகள் தேர்வை 
நடத்தினார். கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். 


தலைவர் : தோழர் A.சீனிவாச சொக்கலிங்கம் PM மகாராஜபுரம்.

உதவி தலைவர்கள் : தோழர் P.டால்வி PM பாளை HO 
                                            தோழர் E.பிச்சையா PM பேட்டை 
                                            தோழர் P.செல்வின்துரை காவல்கிணறு

செயலாளர் : தோழர்  S.செய்யது காதர் பாட்சா C O திருநெல்வேலி HO 


உதவி செயலாளர்கள் : தோழர் T.புஷ்பாகரன் PM பாளை HO 
                                                 தோழர் S.ஆறுமுகம் PM பெருமாள்புரம் 
                                                 தோழர் K.S பஷீர் முகம்மது PM மேலபாளையம் 
                                                 தோழர் S.மேஜர் நல்லையா PM பாளை HO  

பொருளாளர் : தோழர் S.இசக்கி PM தலைச்சா நல்லூர் 

உதவி பொருளாளர் : தோழர் P.பெருமாள் PM திசையன்விளை 

அமைப்பு செயலாளர்கள் : தோழர் S.லிங்கபாண்டி PM ஏருவாடி 
                                                      தோழர் P.ரவி MTS P&T Dispensary 
                                                      தோழர் M.சுந்தரராஜ் PM பணகுடி 
                                                      தோழர் P.பெருமாள் MTS திருநெல்வேலி 

ஆடிட்டராக தோழர் P.வேலு PM திருநெல்வேலி அவர்கள் நியமிக்கப்பட்டார். 

சிறப்பு விருந்தினர்கள்: 


                                        திருநெல்வேலி சட்ட மன்ற உறுப்பினர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். 
மற்றும் மண்டலத்தலைவர் (திருநெல்வேலி மாநகராட்சி) திரு M.C ராஜன் 
அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். 

சிறப்புரை: 

                   மாநில செயலாளர் தோழர் G.கண்ணன், தென் மண்டல செயலாளர் 
தோழர் SB.ராஜமோகன், அஞ்சல் மூன்றின் மாநில உதவி செயலாளர் தோழர் 
SK ஜேக்கப்ராஜ் , GDS மாநில உதவி செயலாளர் தோழர் S.காலபெருமாள் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரை ஆற்றினர். 

வாழ்த்துரை: 


                         அஞ்சல் மூன்றின் நெல்லை கோட்ட தலைவர் தோழர் ஆதிமூலம், அஞ்சல் நான்கின் அம்பை கிளை செயலாளர் தோழர் S.ஆதி நாராயணன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். 

புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்பு விழா: 
                         நமது சகோதர சங்கத்தின் கோட்ட செயலாளர் தோழர் சாக்ரடீஸ் அவர்கள் FNPO-P4 சங்கத்திலிருந்து விலகி சுமார் 14 உறுப்பினர்களோடு 
NFPE சங்கத்தில் இணைந்துள்ளார். அவரை பாராட்டி மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள் கௌரவித்தார்கள். 

                        இந்நிகழ்ச்சிக்கு உதவி செய்து P4 சங்கத்திற்கு உறுப்பினர் சேர்த்த அருமைத்தோழர்  அஞ்சல் மூன்றின் மாநில உதவி செயலாளர் தோழர் SK ஜேக்கப்ராஜ் அவர்களையும் நமது கோட்ட செயலாளர் தோழர் S.செய்யது காதர் பாட்சா அவர்களையும் மாநில சங்கம் வாழ்த்துகிறது, பாராட்டுகிறது. 

                        இறுதியாக கோட்ட செயலாளர் தோழர் SK பாட்சா அவர்கள் நன்றி 
கூற மாநாடு இனிதே முடிந்தது. 


No comments:

Post a Comment