26.03.2015 ONE DAY STRIKE News Flash

Sunday, April 26, 2015

                           சிறப்பு தொழிற்சங்க வகுப்பு
                               சென்னை வடகோட்டம்.

 தோழர்களே!
                           சென்னை வடகோட்டத்தின் சார்பில் 26.04.2015 ஞாயிறு அன்று 
காலை 11.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை சிறப்பானதொரு தொழிற்சங்க வகுப்பை அஞ்சல் நான்கின் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். 
தோழர் V. துரைபாபு மாநில உதவித்தலைவர் அஞ்சல் நான்கு அவர்கள் 
தலைமை தாங்கினார்.


தோழர் வேதகிரி கோட்ட செயலாளர் NFPE-P4 அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


இலாகா ஒழுங்கு நடவடிக்கைகள்-அறிமுகமும் -புரிதலும் 
என்ற தலைப்பில்..
தோழர் M.R மீனாட்சிசுந்தரம் அவர்கள் உரையாற்றினார். 


தொழிற்சங்கம் பற்றி - நமது புரிதல் 
என்ற தலைப்பில், 
தோழர் G.கண்ணன் மாநிலசெயலாளர் அஞ்சல் நான்கு அவர்கள் 
உரையாற்றினார்.


ஏழு ஊதியக் குழுக்களும் - அஞ்சல் நான்கின் பங்கும் 
என்ற தலைப்பில், 
தோழர் S.கருணாநிதி முன்னாள் JCM உறுப்பினர் அவர்கள்
உரையாற்றினார்.

மற்றும் அஞ்சல் மூன்றின் கோட்ட செயலாளர் தோழர் ஏஞ்சல் சத்தியநாதன்,
தோழர் D.சிவகுருநாதன் கேசுவல் ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர், 
தோழர் K.ரமேஷ் கேசுவல் ஊழியர் சங்கத்தின் மாநில செயலர், தோழர் M.சத்தியசீலன் GDS-NFPE சங்கத்தின் கோட்ட தலைவர் ஆகியோர் வாழ்த்தி 
பேசினர். 

இறுதியாக தோழர் சந்திரமோகன் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
தோழர் சந்திரமோகன் 

சில புகைப்படங்கள் ..














No comments:

Post a Comment