NFPE
அணைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
தபால்காரர் மற்றும் MTS தமிழ் மாநிலம் திருவல்லிக்கேணி -- சென்னை - 600005.
தேதி: 22.08.2015
அன்பார்ந்த தோழர்களே !
வணக்கம் . அனைத்து கோட்ட மற்றும் கிளை செயலாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
20 வது கோடி பேர் கலந்துகொள்ளும் இந்திய தொழிலாளி வர்கத்தின் 2- செப்டம்பர்-2015 வேலை நிறுத்தத்திற்கான விளக்கக் கூட்டங்கள் 24-08-2015 முதல் 29-08-2015 வரை ஒவ்வொரு மண்டலத்திலும், கோட்டத்திலும், கிளையிலும் நடத்திட இடம் மற்றும் தேதி, கலந்து கொள்ள உள்ள P3, P4, GDS மாநில சங்க நிர்வாகிகள் பெயர் பட்டியல் அடங்கிய அறிக்கை தங்களுக்கு அனுப்பப்பட்டது.
இந்த அடிப்படையில் தங்கள் கோட்ட மற்றும் கிளையில் கூட்டம் நடந்த தேதி, கலந்து கொண்ட ஊழியர் எண்ணிக்கை, விளக்க கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி P3, P4, GDS மாநில சங்க நிர்வாகிகள் பெயர், கூட்டம் நடந்த இடம் போன்ற விவரங்களை உடனுக்குடன் மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டுகிறோம்.
நீங்கள் அனுப்பும் விவரங்கள் தமிழ் மாநில சங்கத்தின் இணையதளத்தில் வெளியிட உதவியாக அமையும்.
நமது தமிழ் மாநில சங்கத்தின் இணையதள முகவரி (WEBSITE ADDRESS)
www.p4tn.blogspot.in
செப்டம்பர் -2- 2015 பொது வேலை நிறுத்த
நாள் வரை தினமும் மேலே குறிபிடப்பட்டுள்ளது மாநில சங்க இணையதளத்தை பார்த்து இயக்க நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தி கொள்ளவும்.
நன்றி
தோழமை வாழ்த்துக்களுடன்
G . கண்ணன்
தமிழ் மாநில செயலாளர்
NFPE-P4
No comments:
Post a Comment