26.03.2015 ONE DAY STRIKE News Flash

Friday, December 11, 2015

தமிழக ஆட்சியாளர்களின் நில அபகரிப்பை அலசித்தூக்கிய அலை!!!
இன்றைய இளைங்கர்களின் எண்ணங்களை,
 ஈட்டி முனை போல், அரசியல்வாதிகளின் நெஞ்சினை குத்தி வகுந்த  அலை!!!

ஆம், இன்றைய அரசியல்வாதிகளை நம்பாமல், தன்னெழுச்சியாக உதவிக்கரம் நீட்டிய நம் இளைங்கர்கள். 
ஆவேசம் கொண்ட ஆளும் 
அரசியல் வாதிகள்.
படிப்பினை தேவை.. 

          எல்லா இளைங்கர்களும் ஏதோ ஒரு கட்சியில் இருக்கிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 
         ஆனால், வெள்ள நிவாரண பணியில் அரசியல் கட்சி சார்பாக வராமல் பிற தொண்டு அமைப்புகள் சார்பாக வந்ததற்கான காரணம் என்ன?? 

          உதவி செய்ய வந்த அமைப்புகளை செய்ய விடாமல் தடுக்கின்ற அளவிற்கு  தமிழகத்தில் அயோக்கிய தனம் தலை விரித்துஆடுகின்றதா?? 

        அரசியல் வாதிகள் ஆவேசப்படாமல், சிந்திக்க வேண்டிய விஷயம். இளைங்கர்களுக்கு மனிதாபிமானம் நன்றாக உள்ளது, பெருமை பட வேண்டிய விஷயம், 
              ஆனால் அரசியல் கட்சிகள் மேல் நம்பிக்கை இல்லை என்கின்ற உண்மை வேதனை தரக்கூடியது. இது நாட்டிற்கு கேடு விளைவிக்கும் மோசமான முடிவு. 

                   இந்த வெள்ளம் தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இளைங்கர்களை அரசியல் படுத்தாத எந்த நாடும் எழுச்சி பெறாது..
மாறாக சுடுகாடாகும்.... இயற்கை.... 
    

No comments:

Post a Comment