NFPE -P4
விருதுநகர் கோட்டத்தின் 36 வது மாநாடு மற்றும் சிவகாசி கிளை மாநாடு 13.12.2015 அன்று விருதுநகர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தோழர் M. சுப்பையா கோட்ட தலைவர் விருதுநகர், தோழர் S.சங்கர் கிளைத் தலைவர் சிவகாசி ஆகியோர் தலைமையில் வெகு சிறப்பாக நடை பெற்றது.
முதல் நிகழ்ச்சியாக தேசிய கொடியை தோழர் B.குருசாமி முன்னாள் மாநில உதவி தலைவர் அவர்களும், சம்மேளன கொடியை தோழர் M.சுந்தர்சிங் முன்னாள் மாநில உதவி தலைவர் அவர்களும், தபால்காரர் கொடியை தோழர் A.முருகேசன் முன்னாள் மாநில உதவி தலைவர் அவர்களும்,ஏற்றிவைத்தனர். பின் மாநாட்டை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்கள்.
ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு
ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின் கீழ் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக
தேர்வுசெய்யப்பட்டனர்.
விருதுநகர்.
கோட்டத்தலைவர் தோழர் M.சுப்பையா
கோட்டச்செயலாளர் தோழர் M. சோலையப்பன்
பொருளாளர் தோழர் P. கருப்பசாமி
சிவகாசி:
கிளை தலைவர் : P. கருப்பசாமி
கிளை செயலர் : தோழர் K. பால்சாமி
கிளை பொருளாளர் தோழர் G.மாரிமுத்து.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் G.கண்ணன் மாநில செயலாளர் P4,
தோழர் SB.ராஜமோகன் மண்டலசெயலாளர் மதுரை P4,
தோழர் R.ஜெயராஜன் கோட்டசெயலாளர் PSD மதுரை P4,
தோழர் C.பெரியசாமி கோட்டசெயலாளர் கோவில்பட்டி P4,
தோழர் D.செல்வராஜ் கிளை செயலாளர் ராஜபாளையம் P4,
தோழர் A.பழனிக்குமார் கிளை செயலாளர் ராஜபாளையம் GDS-NFPE
ஆகிய தோழர்கள் வாழ்த்துரை மற்றும் சிறப்புரை வழங்கினார்கள்.
மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் அவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கிடுமாறு அறைகூவல் விடுத்தார், அதன் அடிப்படையில் ரூபாய் 12,200/ அந்த இடத்திலேயே ஊழியர்களால் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி P3,P4,GDS சங்கங்களின் சார்பாக முதல் கட்டமாக கோட்ட செயலாளர் தோழர் C.பெரியசாமி அவர்கள் ரூபாய் 10,000/ வழங்கினார் நிதி வழங்கிய அத்துணை தோழர். தோழியருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை மாநில சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment