26.03.2015 ONE DAY STRIKE News Flash

Saturday, March 28, 2015

தென் மண்டலத்தில் அஞ்சல் ஊழியர்களை மீண்டும் மீண்டும் துன்புறுத்தும் 
மண்டலநிர்வாகம்.

02.04.2015 அன்று பணிக்கு வரவேண்டும் என்ற உத்திரவை ரத்து செய்...

விடுமுறை நாட்களில் பணிபுரியுமாறு ஊழியர்களை நிர்பந்திக்க கூடாது என்ற DG உத்திரவை அமுல்படுத்த வேண்டுகிறோம். 

பல முறை விடுமுறை நாட்களில் ஊழியர்களை பணிக்கு வருமாறு தென் மண்டலத்தில் உத்தரவு போடப்பட்டு, நமது மாநில சங்கம் CPMG அவர்களுக்கு கடிதம் எழுதி 
உத்திரவை ரத்து செய்ய வைத்தோம். ஆனால் 
எத்துனை முறை உத்திரவு போட்டாலும் மதுரை 
மண்டல நிர்வாகம் மேல்மட்ட உத்திரவுகளை துளி கூட மதிப்பது இல்லை. தமிழகத்தில் வேறு எந்த மண்டலத்திலும் விடுமுறை நாட்களில் 
ஊழியர்களை பணிக்கு வருமாறு நிர்பந்திப்பது 
இல்லை. 

தென்மண்டலம் தமிழக அஞ்சல் நிர்வாகத்திற்கு 
உட்பட்டதில்லையா ??
அது தனி ராஜ்யமா ??
மதுரை மண்டல நிர்வாகமே!!
02.04.15 அன்று பணிக்கு வரவேண்டும் என்ற உத்திரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டுகிறோம். 

G.கண்ணன்
மாநில செயலாளர்.

No comments:

Post a Comment