26.03.2015 ONE DAY STRIKE News Flash

Thursday, March 26, 2015


NFPE 


          வெற்றி                   வெற்றி               வெற்றி 



NFPE சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 
               மாபெரும் வெற்றி 

 தோழர்களே !
26.03.2015 தமிழகம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப்  போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது.  அதிகாரிகளின்  ஆணவப்போக்கை அடித்து 
நொறுக்கிய  வேலைநிறுத்தம். NFPE இயக்கத்தை துச்சமாக எண்ணிய 
அதிகார வர்க்கத்தை, ஜனநாயக குரல்வளையை  நெறித்து  ரத்தம்  குடிக்க எண்ணிய  பேய்களை  விரட்டியடித்த வேலைநிறுத்தம். ஊழியர்களை 
கிள்ளுக்கீரைகளாக நினைத்து தலைக்கனம் பிடித்த அதிகாரிகளின்  பித்தத்தை சம்மட்டியால் அடித்து இறக்கிய வேலைநிறுத்தம். 

இது ஆரம்பம் முடிவல்ல .. ஊழியர் பிரச்சனைகளை பேசிதீர்க்கவில்லை 
என்றால்  NFPE இயக்கம் மீண்டும் போராட்டத்தை தொடரும் என்பதை பதிவு செய்கிறோம். 

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை NFPE ஊழியர்களில் 90 சதவிகிதம் 
வெற்றி பெற செய்த 
அனைத்து ஊழியர்களுக்கும் 
NFPE அஞ்சல் நான்கு தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக புரட்சிகரமான 
வாழ்த்துக்களையும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம். 

போராட்டம் வெற்றி பெற  கோட்ட மட்டங்களில் ஊழியர்களை ஒன்று திரட்ட ஓயாது உழைத்த அனைத்து 
கோட்ட, கிளை செயலாளர்களுக்கும், 
மாநில சங்க நிர்வாகிகளுக்கும் 
வீர வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். 

நன்றி              நன்றி            நன்றி 

"போராட்டங்கள் உருவாக்கப்படுவதில்லை"
அதிகார வர்க்கத்தால் தூண்டப்படுகிறது. 
G.கண்ணன் 
மாநில செயலாளர் 


No comments:

Post a Comment