NFPE
தமிழ் மாநில ஒருங்கிணைப்புக்குழு
அனைத்து மாநில சங்க நிர்வாகிகள் கூட்டம்
தமிழக NFPE அமைப்பின் வரலாறு காணாத ஒற்றுமையின் மைல்கல் .
தோழர்களே!!
நமது NFPE தமிழ் மாநில அமைப்பின் ஒன்பது சங்கங்களின் மாநில சங்க நிர்வாகிகளின் கூட்டம் 13.03.2015 அன்று திருச்சி நகரில் SRMU மண்டபத்தில்
வெகு சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தோழர் B.பரந்தாமன் அவர்கள்
தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கம் பற்றி ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் எடுத்துரைத்தார். கூட்டத்திற்கு 60 லிருந்து 70 நிர்வாகிகள் வரை கலந்து கொண்டது தமிழக தொழிற்சங்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை.
26.03.2015 ஒருநாள் வேலைநிறுத்தத்தை தமிழகத்தில் சக்தியாக நடத்திடுவோம் என NFPE போர்ப்படை தளபதிகள் சபதம் .
P3 மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி,
P4 மாநில செயலாளர் தோழர் G.கண்ணன்,
R3 மாநிலசெயலாளர் தோழர் R.ரமேஷ்,
R4 மாநிலசெயலாளர் தோழர் B.பரந்தாமன்,
GDS மாநிலசெயலாளர் தோழர் தன்ராஜ்
OS மாநிலசெயலாளர் தோழர் ரமேஷ்,
P3 மாநில தலைவர் தோழர் J.ஸ்ரீவெங்கடேஷ்,
OS மாநில தலைவர் தோழர் D.சிவகுருநாதன்,
GDS மாநில தலைவர் தோழர் S.ராமராஜ்,
R3 மாநில தலைவர் தோழர் K.R.கணேசன்,
GDS அகில இந்திய உதவி பொதுசெயலாளர் தோழர் KC.ராமச்சந்திரன்,
P3 அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் G.வீரமணி,
NFPE உதவி மா பொது செயலாளர் தோழர் மனோகர், ஆகியோர் வேலைநிறுத்த போராட்டத்தை முழு வெற்றி பெற செய்வோம் என சபதம்
ஏற்றனர்.
வேலைநிறுத்த விளக்க கூட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் ... 17.3.2015 முதல் 25.3.2015 வரை. பட்டியல் பின்னால் வரும் .
மண்டல ரீதியான விளக்ககூட்டங்கள்;
மதுரை ; 19.03.2015
திருச்சி ; 21.03.205.
கோவை ; 20.03.2015.
சென்னை ;23.03.2015. இக்கூட்டங்களில் அனைத்து மாநில செயலாளர்களும்
பங்கேற்கின்றனர்.
வேலைநிறுத்தம் வெல்லட்டும்!!
அதிகாரிகளின் கொட்டம் அடங்கட்டும்!!!
கோரிக்கைகள் நிறைவேறட்டும் !!!!!
No comments:
Post a Comment