NFPE-P4
NFPE-P4 தமிழ் மாநில சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உத்திரவு பிறப்பித்த
CPMG அவர்களுக்கு நன்றி.
தோழர்களே!
நமது ஊதியம், மற்றும் ஓய்வூதியம் ஒன்றாம் தேதி வழங்கிட கோரி நமது அஞ்சல் நான்கு மாநில சங்கத்தின் சார்பில் 28.03.2015 தேதியிட்டு CPMG அவர்களுக்கு கொடுத்த கடிதத்தில் கேட்டிருந்தோம். அதன் அடிப்படையில் நமது CPMG பதவி வகிக்கும் கர்நாடகா மாநிலத்தில் ஒன்றாம் தேதி சம்பளம்
கொடுப்பதற்கான உத்திரவு போட்டு அதன் நகலை (COPY TO TAMILNADU CIRCLE, COPY TO KERALA CIRCLE) என்று போட்டு அனுப்பியுள்ளார்கள். இந்த உத்திரவு படி நமது மாநிலத்திலும் 1 ம் தேதி ஊதியம் பெறுவதற்கான உத்திரவு வரும் என எதிர் பார்க்கிறோம்.
உத்தரவு நகல் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
நமது மாநில சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உத்திரவு பிறப்பித்த
CPMG அவர்களுக்கு நமது NFPE-P4 தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment